Thursday, April 30, 2015

துணிவூட்டும் விளையாட்டு


'மனமே பயமேன்' என்றொரு புத்தகம் நான் G.C.E. படிக்கும் போது தகப்பனார் கொண்டுவந்து தந்தார். ஆசிரியர் தமிழ் நாட்டைச் சேர்ந்த முகம்மது மூஸா என்பவர். அதைப்படித்ததும் ஏற்கனவே இருந்த மனத்துணிவு இரு மடங்கானது. பாடசாலையில் புரட்சிகரமான சாதனைகளை நிலை நாட்டினோம். அவசியம் நீங்களும் வாங்கிப் படியுங்கள். அநியாயத்துக்கும் பாத்திலுக்கும் தலைவணங்காது எதிர்த்துப் போராடத் தேவையான துணிவினைத் தரக்கூடியது இன்ஷா அல்லாஹ்.

இக்காலத்தில் அப்படி மனத்துணிவைத் தரக்கூடிய சாதனங்கள் பல உள்ளன. அவற்றுள் ஒன்று தான் Roller பாலங்களில் அமைக்கப்பட்டுள்ள துணிகரமான விளையாட்டுக்கள். மனப்பயத்தைப் போக்கி துணிவையும் வீரத்தையும் தரக்கூடியன அவை.

அப்படியான சில துணிச்சல் விளையாட்டுக்கள் இலங்கையிலும் இருந்தாலும் சீனா, ஐரோப்பா முதலிய நாடுகளில் அபாரமாக அவை அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment