Thursday, May 21, 2015

எதிரியின் எதிரி கூட்டாளி

எதிரியின் எதிரி கூட்டாளி கொள்கையில் முஸ்லிம் நாடுகள் நாடுகள் :-

1- 
ஈஸா நபியை முஸ்லிம்கள் மதிக்கிறார்கள்.
ஈஸா நபியை யூதர்கள் வெறுக்கிறார்கள்.
ஈஸா நபியை மதிக்கும் முஸ்லிம்களை அழிப்பதற்கு, ஈஸா நபியை வெறுக்கும் இஸ்ரேலுக்கு உதவுகின்றன, ஈஸா நபியை பின்பற்றும் (?) அமெரிக்காவும் பிரிட்டனும். எப்படி இருக்கிறது இந்த அரசியல் ?

இதே தத்துவம் தான் மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளிலும்.

இதே தத்துவம் தான் ஈரான் ஹமாஸ் கூட்டும்

2- 
ஈரான் சீஆ நாடு. வஹாபியத்தை ஈரான் கடுமையாக எதிர்க்கிறது.

எகிப்து ஸுன்னி நாடு.

மத்திய கிழக்கில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழிப்பது ஈரானின் திட்டம்.

இதற்காக, தனது பகைமை இயக்கமான இக்வான், ஹமாஸ் ஆகியவற்றுக்கு ஈரான் பூரண ஆதரவளிக்கிறது எப்படியாவது ஸுன்னி எகிப்தை அழிப்பதற்கு.

3- 
ஈரான் சீஆ நாடு.

ஸிரியா (இப்போது) சீஆ ஆதிக்க நாடு. இரு நாடுகளும் நட்பு நாடுகள்.

ஆனால், ஸிரியாவில் சீஆ ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடும் ஹமாஸுடன் (ஸிரியாவுக்கு வெளியில்) ஈரான் நட்பு கொண்டாடுகின்றது.

4- 
துருக்கி வஹாபி இக்வான் சார்பு நாடு.

யெமன் ஸுன்னி நாடு.

ஆனால் யெமனை அழிக்கும் இக்வானுடன் துருக்கி (வெளியில்) நட்பு. (இது யெமன் யத்தத்துக்கு முந்தைய நிலை)

5- 
சீஆ சார்பு ஸிரியாவை அழிக்க ISISக்கு (தாஇஷுக்கு) ஸவூதி உதவி செய்கிறது.

எகிப்தை அழிக்கும் அதே தாஇஷை அழிக்க, ஸிஸிக்கு (எகிப்துக்கு) ஸவூதி உதவி செய்கிறது. காரணம் தாஇஷின் ஆபத்து ஸவூதிக்கு வரும் போது, எகிப்தின் உதவியைக் கோரி, தமது மன்னராட்சியைத் தக்கவைத்துக்கொள்வது நோக்கம்.

"அல்லாஹ்வுக்காக" என்ற இக்லாஸ் இப்போது மருந்துக்கும் இல்லை !

அமெரிக்காவின் 'முத்ஆ' அரசியல்

தற்போதைய மத்திய கிழக்கு அரசியலில் அமெரிக்காவின் இரட்டை வேடம் :-

1- சந்தர்ப்பம் வரும் போது, எந்த நேரமும் முஸ்லிம் நாடுகளைத் தாக்கி ஆக்கிரமிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் (குறிப்பாக அமெரிக்காவும் பிரிட்டனும்) இஸ்ரேலைத் தயார் படுத்திக்கொண்டு வருகின்றன.

"முத்ஆ அரசியல்"
முத்ஆ (متعة) என்றால், தனது தற்காலிக காம தேவைக்காக தற்காலிகமாக ஒரு பெண்ணை மணமுடிக்கும் சீஆக் கொள்கையில் உள்ள வழக்கம். தனது தேவை முடிந்ததும் அவளை விட்டுவிடுவது. இதே மாதிரி தான் அமெரிக்க அரசியலும்.

2- முஸ்லிம் நாடுகளைப் பிளவுபடுத்தி, உள்நாட்டு யுத்தத்தை ஏற்படுத்தி , மத்தியகிழக்கை ஆக்கிரமிக்கும் நோக்கில், எந்த முஸ்லிம் சக்தியை எப்படி ஆதரிக்க வேண்டுமோ அப்படி ஆதரித்தும், எப்போது அந்த சக்தியைப் பயன்படுத்த முடியாமல் போகிறதோ அப்போது வேறொரு முஸ்லிம் சக்தியுடன் நட்பு கொண்டு, முஸ்லிம் நாடுகளை பிளவு படுத்துவது அமெரிக்கா முதலிய ஸியோனஸ சக்திகளுக்கு கைவந்த கலையாகும்.

3- எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கை கைப்பொம்மையாக அமெரிக்கா உபயோகித்து வந்தது. இக்வான்களின் புரட்சியை அடுத்து முபாரக் பதவியை இழக்கவே, அவரை விட்டுவிட்டு, முர்ஸி தலைமையிலான இக்வான்களுடன் அமெரிக்கா நட்பு கொண்டது. எகிப்து மக்கள் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த இராணுவத் தலைவர் ஸிஸியை எப்படியாவது வீழத்த வேண்டும் என்ற நோக்கில் அவரின் அரசாங்கத்துக்கு ஆயுதம் கொடுப்பதை ஒபாமா நிறுத்தினார். எல்லா மட்டத்திலும் ஸிஸியை எதிர்த்தது அமெரிக்கா. ஆனால் அவரை வீழ்த்த முடியவில்லை.

இப்போது எகிப்தையும் அரபு நாடுகளையும் பலவீனப்படுத்துவதற்கு ஈரானை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது அமெரிக்கா. 1980 களில் குமைனியின் இஸ்லாமியப் புரட்சியை முறியடிக்க ரேகன் அரசு பகீரதப் பிரயத்தனங்களை எடுத்தது. ஸதாமை ஏவிவிட்டு எட்டு வருடங்கள் ஈரானுடன் யுத்தம் செய்தது அமெரிக்கா. ஆனால் ஈரானை முறியடிக்க முடியவில்லை. ஈரான் பொருளாதாரம், இராஜதந்திரம், இராணுவத் துறைகளில் எல்லாம் அமெரிக்கா நினைக்காத அளவுக்கு முன்னேறியது.

இப்போது எகிப்தில் ஸிஸி ஆட்சி வந்ததாலும், ஸிஸியை மடக்க அமெரிக்காவால் முடியாததாலும், தாஇஷ் (ISIS) களால் தமது பதவிக்கு ஆபத்து வருமோ என்ப்பயந்த அரபு நாடுகள் (குறிப்பாக ஸவூதி அரேபியா) தமது பதவிகளைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சக்திவாய்ந்த நாடான எகிப்துடன் (ஸிஸியுடன்) கூட்டுச் சேர்ந்துள்ளதாலும், அமெரிக்காவுக்கு மத்தியகிழக்கில் முஸ்லிம் நட்பு நாடுகள் இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டது.

உடனே அமெரிக்கா தனது நீண்டகால எதிரியான ஈரானுடன் நட்புக்கொள்ள ஆரம்பித்துள்ளது. ஸதாம் ஹுஸைனிடமிருந்து இராக்கை அமெரிக்கா விடுவித்த போது இராக்கின் சீஆ சக்தியைப் பயன்படுத்தி இராக்கை ஈரான் நட்பு நாடாக மாற்றிக்கொண்டது முதல், அமெரிக்கா தனது ஈரான் எதிர்ப்புக் கொள்கையில் தளர்வுகளை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஆனால், "பெரிய சைத்தான்" என்றெல்லாம் அமெரிக்காவை ஒரு காலத்தில் மிகக்கடுமையாக விமர்சித்த ஈரானால் இப்போது வெளிப்படையாக அமெரிக்காவுடன் கூட்டுச் சேர முடியவில்லை. ஈரானில் உள்ள சீஆ பொதுமக்களால் அப்படியான புதிய அமெரிக்க ஸியோனிஸ நட்பை சீரனிக்க முடியவில்லை.

எனவே ஊடகங்களிலும் குத்பாக்களிலும் சீஆ தலைவர்கள் அமெரிக்காவுக்கு எதிராகப் பேசும் அதே வேளை அமெரிக்கா சீஆக்களுக்கு ஆதரவான போக்கை கடைப்பிடிப்பதை அண்மைக்கால நடப்புகள் துல்லியமாக எடுத்துக் காட்டுகின்றன. ஈரானின் அணுசக்தி உற்பத்தியை சகல அரபு நாடுகளும் கடுமையாக எதிர்த்தும்கூட, அமெரிக்கா ஈரானுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இது ஈரான் மீது அமெரிக்கா பாசம் கொண்டுள்ளது என்பதால் அல்ல. மாறாக ஸிஸி தலைமையில் பலமாகி வரும் அரபு சக்தியை தகர்க்க முடிந்த ஒரே எதிர்ப்பு சக்தி ஈரான் தான் என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளமையால்தான்.

எனவே இப்போது அமெரிக்காவின் மத்தியகிழக்கு கொள்கை அப்பம் பங்கிட்ட குரங்கின் கதையாகவே இருக்கின்றது. ஒரு வீட்டில் அப்பம் திருடிய இரண்டு பூனைகள் அப்பத்துக்காக சண்டையிட்ட போது இரண்டு பூனைகளும் சமாதானமாக அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு ஒரு குரங்கிடம் போனபோது குரங்கு அப்பத்தை தராசியில் நிறுத்து நிறுத்து பாரமாகவரும் துண்டை தான் சாப்பிட்டு இறுதியில் முழு அப்பத்தையும் குரங்கே சாப்பிட்டு பூனைகள் ஏமாற்றத்தில் திரும்பிய கதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

அதே போன்று வஹாபியத்து பரவிய பின்னர் அரபு நாடுகளும் ஈரானும் இப்போது அமெரிக்காவின் உதவியை எதிர்பார்க்கின்றன. அமெரிக்காவோ மாறிமாறி இரண்டு தரப்பினருடனும் நட்பு போன்று காட்டிக்கொண்டு, இரண்டு தரப்பினரையும் ஏமாற்றி முழு மத்திய கிழக்கையும் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டுவரும் திட்டத்தின் அடிப்படையில் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இது தான் அமெரிக்காவின் நிலைப்பாடு.

Thursday, May 14, 2015

வீரமும் கோழையும்

முதலாவது இருப்பது அமெரிக்க விமானப்படையின் யுத்த விமானத்தின் வீர தீர சாகஸ சாதனைகள்

இரண்டாவது இருப்பது எதிரிப் படையணியை லேஸர் கருவிகளைக் கொண்டு தாக்கியழிக்கும் ரஷ்ய விமானப்படையின் அதி நவீன தாக்குதல் உத்திகள்.

மூன்றாம் உலகப் போர் ஆரம்பித்தால் இந்த விமானங்கள் எல்லாம் களத்தில் குதிக்கலாம். அதன் பின்னர் உலகம் எவ்வாறு சிதைவடைந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்ப்பது கஷ்டமான காரியம் தான்.

சரி, இந்த ஆயுத வீர தீர செயல்களைக் கண்ணுறும் போது, என் மனதில் தோன்றும் எண்ணம் என்ன தெரியுமா? இதில் நாம் பங்குபற்றுவது என்பது முடிந்த காரியமும் அல்ல, தேவையான காரியமும் அல்ல. ஆனால், காபிர்கள் இவ்வாறெல்லாம் துணிவு, வீரம், மன தைரியம் உள்ளவர்களாக வாழும் போது, கஹடோவிடாவில் உள்ள தரீக்கா காரர்கள் என்று கூறிக்கொள்ளும் சிலர், உலகிலேயே வடிகட்டிய சுத்த ஜாஹில்களான சதிகாரர்களுக்குப் பயந்து, தன்மானத்தை இழந்து, ரோஸம் இழந்து, இன்றைய காலகட்டத்தில் அதிமுக்கிய (பர்ழு ஐன் ஆன) அக்கீதா அறிவை ஒரு சில ஆயிரம் ரூபாக்களுக்காக எதிர்த்துக் கொண்டு, சதிகாரர்களுக்கு பல் இழித்துக்கொண்டு, ஹக்குக்கு மாற்றமாக நடந்துகொள்ளும் படுகோழைத்தனத்தை நினைத்து ஒப்பிடும் போது, காபிரின் வீரம் எங்கே, முஃமின்கள் என்று கூறிக்கொள்ளும் இந்த பயந்தாங்கொள்ளிகளின் வீரம் எங்கே என்ற கேள்வி தான் உதிக்கிறது !

இது அமெரிக்க விமானியின் துணிகர சாகச வீரம் :- (விடியோ)




Preview by Yahoo
ம் ரஷ்ய விமானப்படையின் துணிகர, வீரக் கண்காட்சி :-




Friday, May 8, 2015

இஸ்லாம் விரோத வஹாபி அரசியல்

வஹாபி இயக்கங்களின் மார்க்க அக்கீதா (கொள்கை) இஸ்லாத்துக்கு விரோதமானது என்பதை முஸ்லிம்கள் அறிவார்கள். அதே போன்று இபாதத்துகள் சிலதும் இஸ்லாத்தில் இல்லாதவை என்பதை அறீவார்கள்.

ஆனால் மத்திய கிழக்கு அரசியலில் வஹாபியத்தின் முனாபிக்கு தனமான இரட்டை வேடத்தையும், இஸ்லாத்தை அழிக்கும் நோக்கம் கொண்டது என்பதையும் (நாம் அறிந்த வரையில்) இலங்கையில் எமது இந்த Net ஐ தொடராக வாசிப்பவர்கள் மட்டும் தான் அறிந்திருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

இதனை விளக்கக் கூடிய பல கட்டுரைகளையும், உலகப் பிரசித்தி பெற்ற பத்திரிகைகளின் ஆக்கங்களையும், வஹாபி தலைவர்களின் வீடியோக்களையும் கடந்த சில வருடங்களாக நாம் இங்கு பிரசுரித்து வருவதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இப்போது உங்களுக்கு மத்திய கிழக்கு அரசியல் சம்பந்தமாக ஒரு தரவு தருகின்றோம். அதிலிருந்தும், வஹாபியத்து என்பது அரசியலிலும் இஸ்லாத்தின் எதிரியே என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கேள்விகளுக்கு நீங்களே விடை கூறுங்கள் :-
  1. ஈரான் ஒரு தீவிர சீஆ நாடா ?
    (ஆம்)
  2. ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடாக இருந்த லெபனானில் இப்போது ஈரான் ஆதிக்கமா?
    (ஆம்)
  3. ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடாக இருந்த ஸிரியா இப்போது ஈரானின் ஆதிக்கத்திலா?
    (ஆம்)
  4. ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாடாக இருந்த இராக்கில் இப்போது ஈரான் சீஆ ஆதிக்கமா?
    (ஆம்)
  5. ஈரானின் திவிர சீஆக் கொள்கையைப் பின்பற்றும் ஹோஸிகள் என்ற சீஆக்கள் வெறும் இரண்டே வீதம் (2%) உள்ள முற்று முழுதாக ஸுன்னி முஸ்லிம் நாடான யெமனைக் கைப்பற்ற இப்போது ஈரான் சகல உதவிகளும் செய்து, 10 அரபு நாடுகளால் சுமார் ஒரு மாத விமானத்தாக்குதலாலும் முறியடிக்க முடியாத அளவு ஹோஸி சீஆக்களை ஆயுத தாரிகளாக்கியுள்ளதா ஈரான் ?
    (ஆம்)
  6. முற்று முழுதாக அரபு நாடுகளுக்குச் சொந்தமான 'பாப் அல் மந்தப் ' என்ற கடல் நீரிணையில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட அத்து மீறி போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதா ஈரான் ?
    (ஆம்)
  7. ஆக இப்படியெல்லாம் ஈரான் ஸுன்னி அரபு நாடுகளை ஆக்கிரமித்து தனது சீஆ ஆதிக்கத்தை அரபுலகில் பரப்ப பகீரதப் பிரயத்தனம் எடுக்கும் ஈரான்,
    எகிப்தில் ஸிஸியின் ஆட்சிக்கு எதிராகவும் (மக்கள் புரட்சியாலும், இராணுவ உதவியாலும்) பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் எகிப்து ஜனாதிபதி முர்ஸிக்கு ஆதரவாகவும் பகிரங்கமாக செயல் படுகின்றது என்பதையும், எகிப்தின் சினாயப்பகுதியில் ஸிஸியின் அரசாங்கத்தை கவிழக்கப் போராடும் இக்வானுல் முஸ்லிமீன் சார்பு ஹமாஸ் திவிரவாதிகளுக்கு ஈரான் சகல உதவிகளும் செய்கின்றது என்பதையும் நீங்கள் அறிவீர்களா? (எமது Net ஐ தொடர்ந்து வாசிப்பவர்களும், உலகப்பிரசித்தமான பத்திரிகைகளை வாசிப்பவர்களும் கூறும் விடை :
    (ஆம்)
  8. ஆயின், அரபுலகில் பல பிரதான நாடுகளை விழுங்கி ஏப்பம் விட்டதும், யெமனையும் விழுங்க போராடும் ஈரானுக்கு நனறாகத் தெரியும் : எகிப்தில் இக்வானுல் முஸ்லிமீன்களுக்கு உதவி செய்தால் தான், அங்கு ஸுன்னி இஸ்லாத்தை அழிக்க முடியும், தனது சீஆக் கொள்கையை பரப்ப முடியும் என்பது தெளிவாகிறது அல்லவா?

    எனவே இக்வானுல் முஸ்லிமீனின் "இஸ்லாமிய அரசாங்கம்" , "இஸ்லாமிய ஆராய்ச்சி" என்பதெல்லாம் போலி வேசம் என்பதும்,

    ஈரானுக்கு எகிப்தை தாரைவார்த்துக் கொடுத்தாவது தனது கட்சி ஆடசியில் அமர வேண்டும் என்பதே இக்வான் வஹாபி தலைவர்களின் அரசியல் நாடகம் என்பதும் புரிகிறதா?
    (ஆம்) என்று கூறுவதும், (இல்லை) என்று கூறுவதும் உங்கள் சிந்தனா சக்தியைப் பொறுத்த விடயம் !

ISIS தாஇஷ் USA க்கு எச்சரிக்கை

அமெரிக்காவில் ஐந்து மாகாணங்களில் தமது பயிற்றப்பட்ட 71 போராளிகள் இருப்பதாகவும், முன்வரும் சில மாதங்களில் அமெரிக்காவில் தாக்குதல்கள் நடைபெறும் எனவும் IS தாஇஷ் வஹாபிகள் எச்சரித்துள்ளனர்.

(இதே விதமாக உலகெங்கும் சகல நாடுகளிலும் திவிர வஹாபிகளை உருவாக்கி, சந்தர்ப்பம் வரும்போது, தலைமைத்தவத்தின் கட்டளைப்படி அந்த நாடுகளில் பயங்கரவாத நடிவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்துவதே IS வஹாபித் தலைமைப் பீடத்தின் திட்டமாகும்)

அமெரிக்காவைத்தாக்குவதாக கூறும் செய்தி :



3 வஹாபி பயங்கரவாதிகள் கொலை

எகிப்தில் பலஸ்தீனுக்கு அடுத்து உள்ள சினாய் பகுதியில் கடந்த சில வருடங்களாக ஈரானின் உதவியுடன் இயங்கும் ஹமாஸ் (இக்வானுல் முஸ்லிமூன்) வஹாபிகள், எகிப்து இராணுவத்தை அழித்து லிபியா போன்று உள்நாட்டு யுத்தம் நடக்கும் நாடாக எகிப்தை மாற்றி அழிப்பதற்காக பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதை முன்னர் நீங்கள் வாசித்திருப்பீர்கள்.

அந்த தேசத் துரோகிகளான ஹமாஸ் தீவிரவாத தலைவர்களில் மூவரை எகிப்து இராணுவம் கொன்றுள்ளது. அவர்களின் படங்கள் இவை.







Saturday, May 2, 2015

பழமொழியின் பொருள் என்ன?


ஊர் பாவணையும், உண்மைப் பாவனையும்

ஊர்களில் பொதுமக்கள் சிலரால் அந்தப் பழமொழிகளுக்கு கொடுக்கப்படும் அர்த்தங்களும் அவற்றின் சரியான அர்த்தங்களும்.
  1. (குத்தம் பார்க்கில் சுத்தம் இல்லை) 
    ஒவ்வொருவருடையவும் குற்றங்களை தேடிக்கொண்டு போனால், ஒருவருமே சுத்தவாளிகள் இல்லை. எல்லோருமே தவறு செய்யக் கூடியவர்கள் தான் என்பதைக் கூற இப்பழமொழி பயன்படுத்தப் படுகின்றது.

    குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
    குடும்பங்களில் உள்ள உறவினர்கள் தமக்கிடையில் ஒவ்வொருவருடையவும் சிறிய தவறுகளைத் துருவித் துருவி தேடக்கூடாது. பேசக் கூடாது. அப்படி மற்றவர்களால் நடக்கும் சிறு சிறு தவறுகளையெல்லாம் பேசிக் கொண்டிருந்தால் (சுற்றம் என்ற) குடும்ப உறவுகள் பாதிக்கப்படும். குடும்ப உறவை இழக்க நேரிடும். குடும்பத்தில் அமைதியின்மை குழப்பங்கள் ஏற்படும். எனவே முடிந்தளவு குடும்பத்தில் உள்ளவர்களின் சிறு சிறு தவறுகளை கண்டும் காணாதது போல் நடந்தால் தான் குடும்பம் ஒற்றுமையாக, பலமாக அமையும்.
  2. (மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியது போல)
    மண்ணால் செய்யப்பட்ட குதிரையை உண்மையான குதிரை என்று நம்பி, அதில் ஏறி ஆற்றைக் கடக்க முயன்றால் தோழ்வி தான். சிலரை நம்பி ஒரு காரியத்தில் இறங்கினால் அவர்கள் ஏமாற்றி விடுவர், இறுதியில் தோழ்விதான் என்பதைக் கூற இப்பழமொழி பயன்படுத்தப் படுகின்றது.

    மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்கியது போல

    சில ஆறுகளில் ஓடும் நீரோட்டம், சில வேளைகளில் கனமில்லாத (உறுதியில்லாத) தற்காலிக மண் குவியல்களை ஏற்படுத்தும். பார்வைக்கு அது உறுதியான மணல் மேடு போன்று காட்சியளித்தாலும் அதில் யாராவது காலை வைத்தால் உள்ளே அமிழ்ந்து விடுவார். மண் குதிர் என்று அழைக்கப்படும் அந்த இழகிய மண் குவியல் போன்று, நேர்மையில்லாத, வாக்களித்தால் வாக்கை நிறைவேற்றாத சிலர் இருக்கிறார்கள். அவர்களின் பேச்சை நம்பி யாராவது ஒரு காரியத்தில் இறங்கினால் வாக்கை நிறைவேற்றாமல் ஏமாற்றி வீடுவர். பொது மக்கள் பயன்படுத்தும் அர்த்தமும் இதையே குறிக்கின்றது. (குதிரை என்பதற்குப் பதில் குதிர் என்று கூறினால் சரி)
  3. (வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தையும் அடித்துக்கொண்டு போனது)
    ஒரு இடத்தில் சிறிது தண்ணீர் இருந்தது. அவிடத்துக்கு வெள்ளம் வந்து, வற்றும் போது, ஏற்கனவே இருந்த நீரையும் அள்ளிக்கொண்டு போனது. ஒருவனுக்கு உதவி செய்யும் உருவத்தில் வந்த ஒருவனோ அல்லது ஒரு விடயமோ ஏற்கனவே இருந்த வசதியையும் இல்லாமலாக்கி விட்டது என்பதைக் குறிக்க இப்பழமொழி பயன்படுத்தப் படுகின்றது.

    வந்த வெள்ளம் இருந்த வள்ளத்தையும் அடித்துக்கொண்டு போனது
    எந்த இடத்திலும் தேங்கி இருக்கின்ற தண்ணீரை, அவிடத்துக்கு வரும் வெள்ள நீர் உடனடியாக அடித்துக்கொண்டு போவதில்லை. வெள்ளம் வற்றிய பின்னரும் ஏற்கனவே இருந்த நீர் அவிடத்தில் தங்கி இருக்கும். படிப்படியாகத்தான் வற்றும். எனவே பழமொழியில் வெள்ளம் என்று கூறுவதற்குப் பதிலாக 'வள்ளம்' என்பதே சரியானது. வள்ளம் என்றால் தோணி. ஆற்றில் போய் மீன் பிடிக்கவும், ஆற்றைக் கடந்து மறு கரைக்குப் போகவும், வெள்ளம் வந்தால் அதன் ஆபத்துகளை விட்டும் தப்பவுமே ஒருவன் தோணியைப் பயன்படுத்துகிறான். அப்படியாக தோணியால் ஒருவன் தனது வாழ்வாதாராத்தை நடாத்திக் கொண்டு போகும் போது, ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் வந்து, அவனது தோணியை அடித்துக்கொண்டு போகின்றது. இதனால் அவனின் பொருளாதாரம், பாதுகாப்பு என்பன பாதிக்கப்பட்டு அவன் துன்பத்துக்கு ஆளாகின்றான்.

    யாராவது தீயவர்களோ அல்லது இயற்கை அனர்த்தங்களோ வந்து , தனக்கு உதவியாக இருந்த ஒரு ஆளையோ அல்லது பொருளையோ அல்லது ஒரு தொழிலையோ காவிச் செல்வதைக் குறிக்க இப்பழமொழி பயன் படுத்தப்படுகின்றது. இங்கும் வெள்ளம் என்பதற்குப் பதில் 'வள்ளம்' என்பது மட்டும் மாறினால் சரி. அர்த்தம் ஒன்று தான்.