Friday, March 16, 2018

யெமனில் கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறி

யெமனில் பேரறிஞர்கள் மூவரின் வபாத்தும்
கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியும்
முதலாவது :-
17.2 2018 இல் அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் ஸாலிம் அஷ்ஷாத்திரி என்ற இஸ்லாமிய உலகம் போற்றும் பேரறிஞர் வபாத்தானார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவரிடம் உலகில் பல நாடுகளிலும் உள்ள ஏராளம் உலமாக்கள் மார்க்க கல்வி கற்றிருக்கிறார்கள்.
இவர் இலங்கைக்கு வந்திருந்த போது பல இடங்களில் அவரின் பேச்சை மொழி பெயர்க்கக்கூடிய பாக்கியம் அடியேனுக்கு கிட்டியது. கஹட்டோவிட்டாவுக்கு வந்த போது தற்போதைய பாதிபிய்யா மத்ரஸாவுக்கான அடிக்கல்லையும் நட்டியவர்கள் இவர்களே. இவர்கள் கொழும்பில் தங்கியிருந்த போது இவர்களுக்கு பலவிதமான கித்மத்துகள் செய்யக்கூடிய பாக்கியமும் எனக்கும் எனது பிள்ளைகள் அப்துஸ்ஸலாம் முகம்மது ஸஈதுக்கும் M.N.M. ரிஷானுக்கும் கிட்டியது. அல்ஹம்து லில்லாஹ்.
இரண்டாவது :-            
5.3 2018 இல் வபாத்தான அல் ஹபீப் அப்துல்லாஹ் பின் முகம்மது பின் அலவி பின் ஷிஹாபுத்தீன் என்ற உலகம் போற்றும் பேரறிஞரையும் யெமன் நாடு இழந்தது. ரஸூலுலல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் மார்க்க அறிவில் பேரறிஞராக விளங்கிய அதே வேளை, கவிதைத் துறையில் பெரும் பாண்டித்தியம் பெற்றவர்களாக விளங்கினார்கள். நான் யெமன் போயிருந்த போது, பேரறிஞர் ஹபீப் உமர் அவர்களுடன் போய் இவரின் ஒரு வஃழு மஜ்லிஸில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. இவரின் பயான் முழுதும் கருத்தாளம் மிக்க கவிதையாகவே இருந்தது.
மூன்றாவது :-                 
3.3.2018 இல் ஷஹீதாக்கப்பட்ட 87 வயதுடைய அல் ஹபீப் ஐதுரூஸ் பின் அப்தில்லாஹ் பின் ஸுமீத் அவர்களுடைய வபாத்து இக்கால கவாரிஜ் வஹாபிகளின் கொலை வெறியை முழு உலகுக்கும் காட்டிவிட்டது. கவாரிஜ்கள் (வஹாபிகள்) கொலைகாரர்கள் என்ற நபிமொழியை மீண்டும் உறுதி செய்துவிட்டது.
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களும் யெமனில் மிகவும் புகழ் பெற்ற ஒரு மார்க்க அறிஞர்.
வெள்ளிக்கிழமை காலையில் இவரின் வீட்டுக்குச் சென்ற சில கவாரிஜ் வஹாபிகள், தமக்கு சுகமில்லை என்றும் ஓதிப்பார்க்கும்படியும் கூற, தான் ழுஹாத் தொழுதுவிட்டு வருகிறேன் என்று கூறி தொழ ஆரம்பித்து ருக்கூஉவில் இருக்கும் போது, கவாரிஜ் வஹாபி தனது துப்பாக்கியால் இவரைச் சுட்டு படுகொலை செய்தான். இக்கோரச் சம்பவம் கேட்ட உலக முஸ்லிம்கள் (கவாரிஜ் வஹாபிகள் அல்ல) பேரதிர்ச்சி யடைந்து துக்கக் கடலில் மூழ்கினார்கள்.
இவர்கள் 87 வயதுடைய ஒரு முதியவர்.
இவர்கள் ரஸூலுல்லாஹ்வின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் ஒரு பெரிய மார்க்க அறிஞர்.
இவர்கள் தொழுகையில் அல்லாஹ்வுடன் இருக்கும் போது கொலை செய்தான் வஹாபி
இவர்களை வஹாபி படுகொலை செய்தது முஸ்லிம்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை
(( وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ عَذَابًا عَظِيمًا)) (4:93 النساء)
அல்லாஹு தஆலா புனித திரு குர்ஆனில் கடுமையாக எச்சரிக்கிறான் இப்படி : -
"யார் ஒரு முஃமினை வேண்டுமென்றே கொலை செய்கிறானோ, அவனுக்குரிய கூலி நரகம் தான். அவன் அதில் நிரந்தரமாகவே தங்கிவிடுவான். அவன் மீது அல்லாஹ் கோபமடைந்து, அவனை லஃனத்தும் செய்து, அவனுக்கு வலுப்பமான வேதனையையும் ஏற்பாடு பண்ணி வைத்திருக்கிறான்" .
                        தரீக்கா, மத்ஹபுகள் என்ற உண்மையான இஸ்லாத்தை விட்டும் நீங்கி, கவாரிஜ் வஹாபி இயக்கங்களில் சேர்ந்துள்ளவர்களுக்கு ஈமானுக்குப் பகரமாக கவாரிஜ் தலைவர்கள் கொடுப்பது கொலை வெறியைத்தான். எனவே அவர்கள் இறுதியில் அடையும் இடத்தைப் பற்றி அல்லாஹு தஆலாவின் இந்த எச்சரிக்கையை கேட்டாவது, உடனடியாக வஹாபி கவாரிஜ் இயக்கங்களை விட்டும் நீங்கி, அவர்களின் பெற்றோர்கள், பாட்டன் பூட்டன்மார்கள் இருந்ததும், ரஸூலுல்லாஹ் வரை தொடராக இருப்பதுமான உண்மை இஸ்லாத்துக்கு வாருங்கள். ஈமானைப் பாதுகாத்து ஸுவர்க்கம் செல்ல முயற்சியுங்கள்.
15.3.2018

Thursday, March 15, 2018

ஸிரியா நடப்பு : சில Points கள்

சில Points  கள்  :-
1-
மத்திய கிழக்கில் நடப்பதை அளக்க முஸ்லிம் அல்லாத ஊடகவியலாளரால் முடியாது. காரணம், மத்திய கிழக்கு பற்றி ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை அவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் கூறுவது குப்பையில் எறியப்பட வேண்டியவை.
2-
வஹாபிகள் கவாரிஜ்கள் என்பதை , குர்ஆன் ஹதீஸ் மூலமே அறிய வேண்டும். அத்துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக அறிஞர்களின் நூல்களை படிப்பவர்களுக்கே அந்த விடயம் தெரிய வரும். ( காபிர்களின் மீடியா, வஹாபிகளின் மீடியா என்ற சாக்கடையில் அந்த தகவல்களை பெற முடியாது)
3-
காலத்துக்கு காலம் தோன்றும் கவாரிஜ்களை அழித்தொழிக்கும்படி ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். இக்காலத்தில் தோன்றியுள்ள கவாரிஜ்களே வஹாபிகள். எனவே காபிர் மீடியாக்களையும், கவாரிஜ் மீடியாக்களையும் நம்பி , கவாரிஜ்களை அழிப்பவர்களை எதிர்ப்பது ரஸூலுல்லாஹ்வையே எதிர்ப்பதாகும்.
4-
கெட்டவர்களைக் கொண்டும் அல்லாஹ் இந்த மார்க்கத்துக்கு உதவி செய்வான் என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே சீஆ அஸாத் மூலமோ, சீஆ ஈரான் மூலமோ அல்லது கொம்யூனிஸ ரஷ்யா மூலமோ அல்லாஹு தஆலா கடைசி கால கொலை வெறியர்களான, அவ்லியாக்களினதும்  ஸஹாபாக்களினதும் கப்ருகளையும் தோண்டியழிக்கும் கவாரிஜ்களை அழிக்கும் போது அதை எதிர்ப்பவர்கள் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.
5-
ரஸூலுல்லாஹ்வால் பல ஹதீஸ்கள் மூலம்
"
நேர்வழி" என்று பாராட்டப்பட்ட நாடு ஸிரியா. ஈஸா (அலை) இறங்குகுவதும் அங்கு தான். ஸிரியாவில் மிகப் பெரும்பான்மையினர் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், அஹ்லு பைத்துகளையும் பின்பற்றும் ஸுன்னத்து வல் ஜமாஅத்து முஸ்லிம்களே. எனவே ஒரு உண்மை முஸ்லிமுடைய கடமை, அந்த ஸிரிய ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை தேடிப் பார்ப்பதே. அவர்கள் ஸிரிய அரசாங்கத்தை ஆதரிக்கிறார்களா அல்லது கவாரிஜ் வஹாபி பயங்கரவாத போராட்டக் குழுக்களையா ஆதரிக்கிறார்கள் என்பதைத் தேடிப்பார்ப்பது உண்மை முஸ்லிமுடைய கடமையாகும். அப்படியின்றி யூத நஸாரா கவாரிஜ் மீடியாக்களை "வேதம் போல்" நம்பினால் அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். " (நபியே) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர்.ஏனென்றால் நிச்சயமாக காது, கண், இதயம் ஆகிய ஒவ்வொன்றுமே ( அதனதன் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். "(ஸூரத்துல் இஸ்ராஉ 17:36)
ஸிரியாவின் பிரதான முப்தியாகவும் ஸுன்னத் வல்ஜமாஅத்து உலகப் பேரறிஞராகவும் இருந்த அறிஞர் பூத்தியை அல்லாஹ்வின் பள்ளியில் பிரசங்கம் நடாத்தும் போது இன்னும் சுமார் ஐம்பது உலமாக்களையும் குண்டு வைத்து படுகொலை செய்தார்கள் இந்த கவாரிஜ் வஹாபிகள். அவருக்குப் பிறகு ஸிரியாவின் முப்தியாக இருக்கிறார் கலாநிதி ஹஸ்ஸூன் என்ற அறிஞர். அவர்களும் மற்ற ஸுன்னி முஸ்லிம்களும் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் போது, இலங்கையில் வஹாபி மீடியாக்கள் எனும் சாக்கடையில் விழுந்துகொண்டு ஸிரிய அரசாங்கத்தை எதிர்ப்பது வடிகட்டிய கண்மூடித் தனமாகும்.
Done 12.3.2018

Monday, March 12, 2018

ஸிரியாவில் கவாரிஜ் பயங்கரவாதம்

சில Points  கள்  :-
1- மத்திய கிழக்கில் நடப்பதை அளக்க முஸ்லிம் அல்லாத ஊடகவியலாளரால் முடியாது. காரணம், மத்திய கிழக்கு பற்றி ஹதீஸில் கூறப்பட்டுள்ளவை அவர்களுக்கு தெரியாது. எனவே அவர்கள் கூறுவது குப்பையில் எறியப்பட வேண்டியவை.
2- வஹாபிகள் கவாரிஜ்கள் என்பதை , குர்ஆன் ஹதீஸ் மூலமே அறிய வேண்டும். அத்துறையில் ஆய்வில் ஈடுபட்டுள்ள உலக அறிஞர்களின் நூல்களை படிப்பவர்களுக்கே அந்த விடயம் தெரிய வரும். ( காபிர்களின் மீடியா, வஹாபிகளின் மீடியா என்ற சாக்கடையில் அந்த தகவல்களை பெற முடியாது)
3- காலத்துக்கு காலம் தோன்றும் கவாரிஜ்களை அழித்தொழிக்கும்படி ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். இக்காலத்தில் தோன்றியுள்ள கவாரிஜ்களே வஹாபிகள். எனவே காபிர் மீடியாக்களையும், கவாரிஜ் மீடியாக்களையும் நம்பி , கவாரிஜ்களை அழிப்பவர்களை எதிர்ப்பது ரஸூலுல்லாஹ்வையே எதிர்ப்பதாகும்.
4- கெட்டவர்களைக் கொண்டும் அல்லாஹ் இந்த மார்க்கத்துக்கு உதவி செய்வான் என்று ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே சீஆ அஸாத் மூலமோ, சீஆ ஈரான் மூலமோ அல்லது கொம்யூனிஸ ரஷ்யா மூலமோ அல்லாஹு தஆலா கடைசி கால கொலை வெறியர்களான, அவ்லியாக்களினதும்  ஸஹாபாக்களினதும் கப்ருகளையும் தோண்டியழிக்கும் கவாரிஜ்களை அழிக்கும் போது அதை எதிர்ப்பவர்கள் அல்லாஹ்வின் நிர்வாகத்தில் தலையிடுகிறார்கள்.
5- ரஸூலுல்லாஹ்வால் பல ஹதீஸ்கள் மூலம்
"நேர்வழி" என்று பாராட்டப்பட்ட நாடு ஸிரியா. ஈஸா (அலை) இறங்குகுவதும் அங்கு தான். ஸிரியாவில் மிகப் பெரும்பான்மையினர் மத்ஹபுகளையும், தரீக்காக்களையும், அஹ்லு பைத்துகளையும் பின்பற்றும் ஸுன்னத்து வல் ஜமாஅத்து முஸ்லிம்களே. எனவே ஒரு உண்மை முஸ்லிமுடைய கடமை, அந்த ஸிரிய ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதை தேடிப் பார்ப்பதே. அவர்கள் ஸிரிய அரசாங்கத்தை ஆதரிக்கிறார்களா அல்லது கவாரிஜ் வஹாபி பயங்கரவாத போராட்டக் குழுக்களையா ஆதரிக்கிறார்கள் என்பதைத் தேடிப்பார்ப்பது உண்மை முஸ்லிமுடைய கடமையாகும். அப்படியின்றி யூத நஸாரா கவாரிஜ் மீடியாக்களை "வேதம் போல்" நம்பினால் அல்லாஹ்வின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். " (நபியே) நீர் அறியாத யாதொரு விஷயத்தையும் நீர் பின்தொடராதீர்.ஏனென்றால் நிச்சயமாக காது, கண், இதயம் ஆகிய ஒவ்வொன்றுமே ( அதனதன் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும். "(ஸூரத்துல் இஸ்ராஉ 17:36)
ஸிரியாவின் பிரதான முப்தியாகவும் ஸுன்னத் வல்ஜமாஅத்து உலகப் பேரறிஞராகவும் இருந்த அறிஞர் பூத்தியை அல்லாஹ்வின் பள்ளியில் பிரசங்கம் நடாத்தும் போது இன்னும் சுமார் ஐம்பது உலமாக்களையும் குண்டு வைத்து படுகொலை செய்தார்கள் இந்த கவாரிஜ் வஹாபிகள். அவருக்குப் பிறகு ஸிரியாவின் முப்தியாக இருக்கிறார் கலாநிதி ஹஸ்ஸூன் என்ற அறிஞர். அவர்களும் மற்ற ஸுன்னி முஸ்லிம்களும் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் போது, இலங்கையில் வஹாபி மீடியாக்கள் எனும் சாக்கடையில் விழுந்துகொண்டு ஸிரிய அரசாங்கத்தை எதிர்ப்பது வடிகட்டிய கண்மூடித் தனமாகும்.
12.3.2018

Sunday, March 4, 2018

மஹ்தி (அலை) பற்றி மேற்கு மாநாடு

மஹ்தி (அலை) பற்றி மேற்கு நாடுகளின் மாநாடு
உலகில் எந்த நாட்டிலும் நடக்கும் போராட்டங்களையும் அப்பிராந்திய சூழலுடன் தொடர்பு படுத்தி எவரும் ஆராயலாம், தீர்மானங்கள் எடுக்கலாம். ஆனால் மத்திய கிழக்கில் நடக்கும் போராட்டங்களை அவ்வாறு எவரும் சுயமாக ஆராய்ந்து தீர்மானங்கள் எடுக்க முடியாது.
காரணம், இரண்டு.
முதலாவது : உலகின் பிரதான மார்க்கங்கள் எல்லாம் தோன்றியதும், உலகின் முதலாவதும் இறுதி வரையும் மார்க்க மத்திய தலங்களாகவும் திகழும் மஸ்ஜிதுகளான, கஃபதுல்லாஹ் , மஸ்ஜிதுந் நபவி, பைத்துல் மக்திஸ் ஆகிய புனிதஸ்தலங்கள் அமைந்திருப்பதும் மத்திய கிழக்கில்தான்.
இரண்டாவது : இதன் பிறகும் உலகம் முடியும் வரையும் நிகழவிருக்கும் பிரதான சம்பவங்கள் நிகழப் போவதும் மத்திய கிழக்கில் தான். அந்த சம்பவங்களைப் பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளதும் குர்ஆனிலும் ஹதீஸிலும் தான். எனவே குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டுள்ள கடைசி கால அடையாளங்களையும், சம்பவங்களையும் அறியாமல், உலகில் உள்ள எந்தப் பெரிய அரசியல் ஆய்வாளர்கள் அபிப்பிராயங்களைக் கூறினாலும் அவை ஏட்டுச் சுரைக்காயாக இருக்குமே தவிர, யதார்த்தமான உண்மையாக இருக்கமாட்டாது.
எனவே தான், உலக அரசியலில் பெரும் பட்டங்கள் பெற்று, வல்லரசு நாடுகளின் அரசியலில் மூழ்கியுள்ள ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி மத்திய கிழக்கில் நடக்கும் சம்பவங்கள் இருப்பதால், இஸ்லாத்தில் இது பற்றி என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம் என்று வல்லரசு நாடுகளின் அரசியல் அவதானிகள் இப்போது தமது கவனத்தை குர்ஆன் ஹதீஸின் பக்கம் திருப்பியுள்ளார்கள்.
இதனால் தான் 1400 வருடங்களுக்கு முன்னரே இஸ்லாத்தை எப்படியாவது அழிக்க வேண்டும்என்று கங்கணம் கட்டிய யூதர்கள், குர்ஆன் ஹதீஸில் அது பற்றி ஏதாவது கூறப்பட்டுள்ளதா என்று துருவித் துருவி ஆராய்ந்தார்கள். நஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும் என்ற பிரபலமான ஹதீஸ் அவர்களின் கண்களில் பட்டது.
சைத்தானின் கொம்பு என்றால், இஸ்லாத்துக்கு எதிரான சக்தி என்பதை உணர்ந்த அவர்கள், நஜ்து பிரதேசத்தின் வரலாற்றை ஆராய்ந்தார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறுவராக இருக்கும் போது, கஃபதுல்லாஹ் புணருஸ்தாபனம் செய்யப்பட்ட பின்னர், ஹஜருல் அஸ்வத் கல்லை அவர்களின் தலைமையில் குறைசிகள் வைக்கும் போது, நஜ்து தேச கிழவரின் உருவில் சைத்தான் வந்து, "இவ்வளவு பெரிய தலைவர்கள் இருக்கும் போது, ஒரு யத்தீம் பிள்ளை மூலமா வைக்க வேண்டும்" என்று இழிவாக கூறினான் சைத்தான். நஜ்து தமக்கு தேவையான ஊர் தான் என்பதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பிடித்து அடைக்க அல்லது நாடு கடத்த அல்லது கொலை செய்ய திட்டம் தீட்ட குறைசித் தலைவர்கள் ரகசியக் கூட்டம் கூடிய போதும், நஜ்து கிழவரின் உருவத்தில் வந்த சைத்தான் தான், கொலைத்திட்டத்தை ஆமோதித்தான். இது திரு குர்ஆனில் கூறப்பட்டுள்ள சம்பவம். இதன் மூலமும், நஜ்து தான் தமக்கு தேவையான இடம் என்பதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து செல்லும் போதும், அவர்களது வீட்டைச் சுற்றி வாள்களுடன் முற்றுகையிட்டிருந்த குறைசி வாலிபர்களைப் பார்த்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "உங்கள் தலையில் மண்ணைப் போட்டுவிட்டு தப்பி போய்விட்டார்கள்" என்று கூறியதும் நஜ்து தேச கிழவனின் உருவில் வந்த சைத்தான் தான். இதன் மூலமும் நஜ்து தமக்கு தேவையான இடம் தான் என்பதை யூதர்கள் அறிந்து கொண்டார்கள்.
பிறகு, "நஜ்தில் சைத்தானின் கொம்பு முளைக்கும்" என்று ரஸூலுல்லாஹ் அவர்கள் எதிர்வு கூறியிருப்பதைக் கண்ணுற்ற யூதர்கள், நுணுக்கு காட்டி கண்ணாடியை நஜ்தின் மேல் வைத்து இரவு பகலாக அந்த இஸ்லாத்தின் விரோதியாக வரப் போகும் சைத்தானின் கொம்பை தேடிக்கொண்டிருந்தார்கள்.
ஆம், நஜ்தில் வெளியாகி விட்டான் இப்னு அப்தில் வஹாப் என்ற கவாரிஜ் வஹாபி சைத்தானின் கொம்பு. "எல்லா முஸ்லிம்களும் பித்அத்து வாதிகள். முஷ்ரிக்குகள். தனது புதிய மார்க்கமே தவ்ஹீது" என்று பறை சாற்றினான். "ஆஹா இதோ வந்துவிட்டான் நாம் ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக எதிர்பார்த்து தேடிய ஆசாமி" என்று அக்கால உலக வல்லரசாக இருந்த பிரிட்டிஷ் யூதர்கள் உஷாரானார்கள். தமது உளவாளிகளை அனுப்பி நஜ்து சைத்தானுக்கு தேவையான பொருள், ஆயுத, ஆட்பல சகல உதவிகளையும் செய்தார்கள். அந்த நஜ்து சைத்தான் மூலம் இஸ்லாமிய கிலாபத்து ஆட்சியை ஒழித்துக் கட்டினார்கள் பிரிட்டிஷ் யூதர்கள். பிறகு ISIS வரை பல்லாயிரம் சம்பவங்கள் !
அடுத்து நடக்கப் போவது என்ன என்று குர்ஆன் ஹதீஸில் தேடினார்கள் யூதர்கள். மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்ற இஸ்லாமிய தலைவர் வரப் போகிறார்கள். உலகில் ஏழு வருடங்கள் இஸ்லாமிய ஆட்சி நடைபெறும். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மஹ்தி அலைஹிஸ்ஸலாமுக்கு உதவியாக வருவார்கள். அவர்கள் யூதர்களின் தலைவனான தஜ்ஜாலை வெட்டுவார்கள். யூதர்கள் பூண்டோடு அழிக்கப் படுவார்கள் என்ற செய்திகளையெல்லாம் அறிந்து கொண்டார்கள் மேல் நாட்டினர்கள். இது பற்றி அவர்கள் பெரும் மாநாடுகள் நடாத்தி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதோ மேல் நாட்டினர்கள் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் வருகை பற்றி ஆராய்வதற்காக கூடிய மாநாடு. ஆங்கிலத்தில் உரையாற்றப்படுகிறது, அரபு மொழி பெயர்ப்பும் இருக்கின்றது. எனவே தமிழில் தர வேண்டியதில்லை தானே ?
குறிப்பு : எமது மத்ரஸாவில் (ஆண்கள் பாடசாலைக்கு அண்மையில்) அவ்வப்போது நடைபெறும் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டால் இன்ஷா அல்லாஹ் கூடுதல் விளக்கங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
3.3.2018