Saturday, January 21, 2017

இலங்கையில் இஸ்லாத்தை அழிப்பது யார்?

கஹடோவிடாவிலும் இலங்கையிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து நாளுக்கு நாள் குறைந்து வஹாபிகள் அதிகரிக்க காரணம் யார் ?
 
1-  ஸுன்னத்து வல்ஜமாஅத்து குறைகிறதா கூடுகிறதா என்பதை முதலில் அறிவோம்.
எங்காவது பெரிய கந்தூரியா? பெரிய பயான் நிகழ்ச்சியா? "ஆஹா ! ஸுன்னத்து வல்ஜமாஅத்து வெற்றி நடை போடுகிறது. வஹாபிகளுக்கு இடமில்லை !" என்று "சிந்திக்கத் தெரியாத" பாமர மக்கள் நினைக்கிறார்கள். அப்படிப்பட்ட பலரிடம் நான் கேட்ட கேள்விகளும், அவர்கள் கூறிய விடையும் தான் இவை :
நாம் : இப்போது இங்கு வஹாபிகளின் நிலை என்ன?
அவர் : இப்போது அவர்கள் அமைதி. அன்று பயானில் ஒருவர் வஹாபிக்கெதிராக நன்றாகக் கொடுத்தார். ஷ்ஷ்ஷாநல்ல பயான்.
நாம் : என்ன அப்படி பயானில் விசேசம் ?
அவர் : தராவீஹ் எட்டு ரக்அத்து தான் என்ற வஹாபிகள் இப்போது 20 தொழ முடியும் என்று  கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று அந்த பயானில் அவர் கூறினார்.
நாம் : அப்படியா? அது நல்ல விசயம் தான். சரி, உங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் சென்ற வருடம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் இருந்தவர்கள் , கந்தூரியில் கலந்துகொண்டவர்கள் அத்தனை பேரும் இதே கொள்கையில் இருக்கிறார்களா அல்லது ஏதாவது வஹாபி இயக்கத்தில் சேர்ந்துள்ளார்களா?
அவர் : ஏராளம் பேர் இயக்கங்களில் சேர்ந்துள்ளார்கள்.
நாம் : அப்படியென்றால் ஸுன்னத்து வல்ஜமாஅத்து வளர்கிறதா வஹாபி இயக்கங்கள் வளர்கின்றனவா?
அவர் : இயக்கங்களில் தான் இளைஞர்கள் சேர்கிறார்கள்.
நாம் : அப்படியென்றால் நீங்கள் சொன்ன பயான்களினால் கண்ட பயன் என்ன?
அவர் : ??????
இந்த விதமாக நீங்களும் இலங்கையில் எந்த ஊராரிடமும் கேட்டுப் பாருங்கள். ஸுன்னத்து வல்ஜமாஅத்து தேய்கிறது, வஹாபியத்து வளர்கிறது என்ற முடிவை அவர்களின் வாயாலேயே எடுக்க முடியும்.
சிலர் கூறுவார்கள் : கடைசி காலம் வழிகேடுகள் அதிகரிப்பதாகத் தானே கூறப்பட்டுள்ளது. 72 கூட்டங்களும் வரத்தானே வேண்டும்? என்பார்கள்.
நாம் கூறுகிறோம் : 1996க்கு முன் இலங்கையில் வேகமாக வளர்ந்த வஹாபி இயக்கங்கள் கடைசி காலத்தில் தானே வளர்ந்தன ? 1996, 97, 98 ஆகிய மூன்று வருடங்களிலும் எந்த வஹாபி தலைவரும் விவாதத்துக்கு வராமல் ஓடி யொழிக்க வில்லையா? குறிப்பாக கஹடோவிடாவில் உள்ள மூன்று தரீக்காவிலிருந்தும் எவருமே வஹாபியத்தில் சேர வில்லையே? ஏற்கனவே வஹாபியாக இருந்த பல தலைவர்கள் உட்பட ஏராளம் பேர் தரீக்காவில் சேர்ந்தார்கள் தானே? அந்த மூன்று வருடங்களும் கடைசி காலம் இல்லையா? அந்த மூன்று வருடங்களின் பின்னர் மீண்டும் இளைஞர்கள் தரீக்காக்களை விட்டுவிட்டு, வஹாபி இயக்கங்களை நோக்கி போகிறார்களே? ஏராளமான தரீக்கா  வீடுகளிலும் வஹாபியத்து நுழைய வில்லையா?
அவர் : உண்மை தான் . என்ன காரணம் ?
நாம் : இதோ காரணங்கள் :-
2- அல்லாஹ் வேண்டுமென்று ஸுன்னத்து வல்ஜமாஅத்தை அழிக்க வில்லை. அவன் அப்படி அநியாயம் செய்பவன் அல்லன். ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கையில் வாழக் கிடைப்பது என்பது பெரிய நிஃமத்து (அருள்). அந்த நிஃமத்தை வேண்டுமென்று அல்லாஹ்வாக அழிப்பதில்லை. அல்லாஹு தஆலா திரு குர்ஆனில் கூறுகிறான் :
( إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم )
"மனிதர்கள் (தங்கள் தீய நடத்தையைக் கொண்டு) தங்களை மாற்றிக் கொள்ளாத வரையில், நிச்சயமாக அல்லாஹ்வும் (அவர்களுக்குப் புரிந்த அருளை) மாற்றி விடுவதில்லை". (13:11)
( ذلك بأن الله لم يك مُغيِّرا نعمة أنعمها على قوم حتى يغيروا ما بأنفسهم وأن الله سميع عليم )
" எந்த மக்களும் தங்கள் நிலைமையை மாற்றிக் கொள்ளாத வரையில் , நிச்சயமாக அல்லாஹ்வும், அவர்களுக்குப் புரிந்த அருளை மாற்றி விடுவதில்லை". (8:53)
1996 , 97, 98 ஆகிய மூன்று வருடங்களிலும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் இருந்து யாரும் பிரிந்து வஹாபியத்தில் சேராமல் ஈமானைப் பாதுகாத்துக்கொண்டு இருந்தது அல்லாஹ் செய்த பெரிய அருள் (நிஃமத்து) அல்லவா? அதே போன்று ஏற்கனவே வஹாபியாகி வழிகெட்டிருந்த ஏராளம் பேர் அந்த மூன்று வருடங்களிலும் வஹாபி வழிகேட்டை விட்டுவிட்டு ஸுன்னத்து வல்ஜமாஅத்தில் சேர்ந்து ஈமானைப் பாதுகாத்துக் கொண்டதும் அல்லாஹ்வின் பெரிய அருள் அல்லவா?
இந்த பெரிய அருள் நிலைமையை மாற்றியது யார் ?
இது தான் ஹக்கான இஸ்லாம் என்பதையும், வஹாபியத்து என்பது ஈமானைப் பறிக்கும் பெரும் வழிகெட்ட பித்அத்து என்பதையும் அந்த மூன்று வருடங்களிலும் குர்ஆன் ஹதீஸ் உறுதியான ஆதாரங்கள் மூலம் மக்களுக்கு தொடராக சரியான முறையில் பயான் பண்ணப்பட்டதால் அந்த மூன்று வருடங்களிலும் ஹக்கான இஸ்லாத்தில் மக்கள் இருந்தார்கள். பித்அத்தில் சேரப் பயப்பட்டார்கள். பித்அத்தில் இருந்தவர்கள், தாம் நரகத்தின் வழியில் இருப்பதை தகுதியான பயான்கள் மூலம் அறிந்து உணர்ந்து உண்மையான இஸ்லாத்துக்கு திரும்பி வந்தார்கள்.
அப்படிப்பட்ட மூன்று வருட தரமான பயான்களை தடை செய்தவர்கள் யார்? அப்படியான உண்மையான ஆதாரங்களை கூறும் நிலைமையை சில சதிகாரர்கள் செய்ததனால் தானே அல்லாஹ்வும் தரீக்கா என்ற நிஃமத்தான நிலைமையை மாற்றி விட்டான்?
"தகுதி யில்லாதவர்களுக்கு மார்க்கப் பொறுப்பு கொடுப்பதை" ஏராளம் ஹதீஸுகள் தடை செய்திருந்தும்கூட, தகுதியில்லாதவர்களுக்கு மார்க்க பொறுப்பு கொடுத்ததால் தானே அல்லாஹ்வும் முன்பிருந்த நிஃமத்தை மாற்றி விட்டான்? எனவே இப்படியாக சில சதிகாரர்கள் "அறிவு, ஆதார " நிலைமையை மாற்றியதால் தானே அல்லாஹ்வும் நிஃமத்தை மாற்றி விட்டான்?
அல்லாஹ்வின் நிஃமத்தான "நேர்வழி" என்பதை இவ்வூரில் அல்லாஹ் மாற்றுவதற்கு, சமூகத்தில் உள்ள அநியாயக் காரர்கள் சிலர் செய்த மாற்றங்கள் சில இதோ :
3- மாதந் தோறும் நடைபெற்று வந்த தரமான பயான்களை தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
4- வாராந்தம் மத்ரஸாவில் நாம் நடாத்திய ,"விவாதப் பயிற்சி" மூலம் படித்த இளைஞர்கள் எந்த வஹாபியையும் மடக்கும் தரம் பெற்று வந்த "விவாதப் பயிற்சியை" தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
5- மத்ரஸாவில் வாராந்தம் நாம் நடாத்திய "பிக்ஹு கிளாஸ்" என்ற மார்க்க அறிவூட்டும் மேலான பணியை, தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
6- கஹடோவிடாவில் மிகக் கூடுதலான அளவு மாணவர்களுக்கு நாம் குர்ஆன், பிக்ஹு, அக்கீதா அறிவுகளைப் போதித்துக் கொண்டிருந்த எமது மத்ரஸாவை எம்மிடமிருந்து பறித்து, எமக்குப் பதில் ஆறு முஅல்லிம்களைப் போட்டு ஓதிக்கொடுத்தும், ஊர்மக்களின் ஆதரவு இல்லாததால், வெறும் ஆறே ஆறு மாணவர்களே வந்து கொண்டிருந்து, இப்போது அதையும் இழுத்து மூடி விட்டார்கள். இப்படியாக, தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
7- உலகில் எந்த வஹாபித் தலைவரும் விவாதத்துக்கு வரத் தயங்கிய (சுமார் 20 வருட விவாத அனுபவம் உள்ள) எமது "விவாத சவாலை" ஓரங்கட்டிவிட்டு , விவாத அனுபவமே இல்லாத "போலிகளை" க்கொண்டு BMICH இல் விவாதம் நடாத்தி, ஸுன்னத்து வல்ஜமாஅத்தை இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பகிரங்க மேடையில் படுதோழ்வியடையச் செய்து, வஹாபியத்துக்கு பகிரங்க வெற்றி ஈட்டிக் கொடுத்தார்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்த தரீக்கா சதிகாரர்கள்.
8- வீடு தோறும் ஸுன்னத்து வல்ஜமாஅத்து வாசிக சாலை ( Mini Library) என்று நாம் ஆரம்பித்த திட்டத்தை தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
9- பெண்களுக்கென்று வீடு தோறும் தரமான பயான்கள் நடாத்தியதை, தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
10- இவ்வூரில் மட்டுமல்ல, வெலிப்பன்னை, மள்வானை, காலி, பலப்பிட்டி, கொழும்பு போன்ற இலங்கையின் சகல பாகங்களிலும் தரமான பயான்கள் மூலம் வஹாபியத்தை ஓரே பயானில் முறியடித்து, வஹாபித் தலைவர்களை ஓடியொழிக்க வைத்த எமது பயான்களை தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
11- வீணான அனாச்சார செயல்களில் ஈடுபட்ட வாலிபர்களை வீடுவீடாகப் போய் சந்தித்து, அவர்களை "வஹாபி எதிர்ப்பு போராட்டத்தில்" இணைத்து, பயனுள்ள வாலிபர்களாக நாம் மாற்றிக் கொண்டுவந்த நிலைமையை தரீக்காவில் உள்ள அநியாயக் காரர்கள் சதி மூலம் எமது பதவியைப் பறித்து தடை செய்தார்கள்.
11- உலக நிலைமையைப் பொறுத்த வரை , தரமும், ஆற்றலும், வஹாபிய்தை மடக்கி நேர்வழியை பரப்பும் இலட்சியமும் உள்ள அரபு இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த பேரறிஞர்களுக்கு அந்நாடுகளின் ஆட்சியாளர்கள் முன்னுரிமை கொடுக்காமல், தமது "துன்யா ஆசை" அரசியலுக்கு வால்பிடிக்கும்  "துன்யாதாரி" உலமாக்களை தமது "அரசவை ஆலிம்களாக" நியமித்து, பெயரளவில் ஏதாவது மார்க்க "விழாக்களை" மட்டும் நடாத்திக் கொண்டிருந்தனர்.
                ஆக மொத்தம், இப்படியாக , தகுதியற்றவர்களுக்கு இடம் கொடுத்து , போலியான ஒரு வாழ்வாக தம்மை மாற்றிக் கொண்டதாலேயே அல்லாஹ்வும் "நேர்வழி" என்ற பெரும் நிஃமத்தை மாற்றி விட்டான்.
யா அல்லாஹ், இந்த விளக்கத்தின் பின்னரும் பொய்யான, போலியான "வழிப்பாடு" என்ற பெயரில் சதிகாரர்களும் அவர்களுக்கு வால்பிடிப்பவர்களும் எம்மை எதிர்க்கிறார்கள் என்றால், அவர்களுக்கு இந்த உலகத்திலேயே நீ தண்டனை கொடுப்பாயாக.
21.1.2017