Wednesday, December 20, 2017

அமெரிக்கா அரசியல் தோழ்வி

அல்குத்ஸ் :
உலக அரசியலில் அமெரிக்கா படு தோழ்வி
கடந்த டிசம்பர் 6ம் திகதி முஸ்லிம் உலகுக்கு கறை படிந்த ஒரு நாள். உலக சண்டாளன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு சொந்தமான அல் குத்ஸ் புனித நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என்றும், அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலில் இருந்து அல்குத்ஸுக்கு மாற்றுவதாகவும் அறிவித்த நாள்.
ஆனால் உடனடியாக முஸ்லிம் உலகம் விழித்துக் கொண்டது. அத்துடன் மேற்குலகும் அமெரிக்காவை எதிர்க்க முன்வந்தது.
இஸ்ரேலுக்கெதிராக போராட மற்ற நாடுகள் முன்வரும் பட்சத்தில் தனது படைகளை அனுப்பத் தயார் என்று மலேசியப் பிரதமர் அறிவித்தார்.
 
மொரோக்கோவில் பல அரபு நாடுகளின் பிரதி நிதிகள் கூடி, அமெரிக்க தீர்மானத்தை கண்டித்தன.
துருக்கியில் 48 நாடுகளின் பிரதிநிதிகள், அவர்களுள் 16 அரச தலைவர்கள் கூடி அமெரிக்காவை கண்டித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் வரை இஸ்ரேலுடன் ராஜ தந்திர தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற துருக்கி ஜனாதிபதி அர்துகான், இந்த மாநாட்டில் இஸ்ரேலை "பயங்கரவாத நாடு" என்று காரசாரமாக கண்டித்தார்.
http://www.alalam.ir/news/3212431/%D8%A8%D9%87%D8%B0%D9%87-%D8%A7%D9%84%D8%B9%D8%A8%D8%A7%D8%B1%D8%A7%D8%AA--%D8%A3%D8%B1%D8%AF%D9%88%D8%BA%D8%A7%D9%86-%D9%8A%D8%B1%D8%AF-%D8%B9%D9%84%D9%89-%D9%82%D8%B1%D8%A7%D8%B1-%D8%AA%D8%B1%D8%A7%D9%85%D8%A8-%D8%A8%D8%B4%D8%A3%D9%86-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3--
ஈரான், லெபனான், இராக், ஸிரியா என்பனவும் ட்ரம்பை கடுமையாக எதிர்த்தன.
"அல் குத்ஸ் இஸ்ரேலின் தலைநகராவதற்கு இஸ்ரேல் என்றொரு நாடே இல்லையே" என்று மிகத் துணிச்சலாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் அறிவித்ததாக கொரிய பத்திரிகைகள் அறிவித்தன :
https://arabic.rt.com/video/914357-%D9%83%D9%8A%D9%85-%D8%AC%D9%88%D9%86%D8%BA-%D8%A3%D9%88%D9%86-%D9%88%D9%82%D8%B6%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3-%D8%A7%D9%84%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9/#
"அரசியல் உலகிலிருந்து அமெரிக்காவை சகல உலக நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்" என்று எகிப்து பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது :
https://arabic.rt.com/middle_east/916191-%D9%85%D8%AC%D9%84%D8%B3-%D8%A7%D9%84%D9%86%D9%88%D8%A7%D8%A8-%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%B1%D9%8A-%D9%8A%D8%AF%D8%B9%D9%88-%D9%84%D8%B9%D8%B2%D9%84%D8%A9-%D8%A7%D9%84%D9%88%D9%84%D8%A7%D9%8A%D8%A7%D8%AA-%D8%A7%D9%84%D9%85%D8%AA%D8%AD%D8%AF%D8%A9-%D8%AF%D9%88%D9%84%D9%8A%D8%A7/
இதற்கிடையில் எகிப்து ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ராஜ தந்திரம் மிக்க ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. "அல் குத்ஸ் சம்பந்தமாக தன்னிஷ்டப்படி அமெரிக்கா மட்டும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாது. எனவே அது செல்லுபடியற்றது" என்பதே அந்த பிரேரணை. இதில் உள்ள ராஜ தந்திரம் என்னவென்றால், பாதுகாப்பு சபையில் உள்ள வல்லரசு எந்த நாடாவது, ட்ரம்ப் தன்னிஷ்டப்படி செய்த அந்த தீர்மானத்தை ஆதரித்தால், அது, தனது நாட்டின் கொரவத்தை அமெரிக்காவுக்கு காவு கொடுத்ததாகவும், தனது நாட்டுக்கு இழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே சகல வல்லரசுகளும் எகிப்தின் பிரேரணையை ஆதரிப்பது கடமையாகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தினர்களாக உள்ள பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும், தற்காலிக அங்கத்தினர்களான ஏனைய 10 நாடுகளும் எகிப்தின் பிரேரணையை ஏகமனதாக ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை உலக தீர்மானத்தை முறியடித்தது. அமெரிக்கா வீட்டோவை பாவித்து தனிப்படல் :
http://www.ahram.org.eg/News/202497/26/628374/%D8%A3%D8%AE%D8%A8%D8%A7%D8%B1-%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9-%D9%88-%D8%B9%D8%A7%D9%84%D9%85%D9%8A%D8%A9/%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A7%D8%B1-%D8%AD%D8%B5%D9%84-%D8%B9%D9%84%D9%89-%D8%AF%D8%B9%D9%85--%D8%B9%D8%B6%D9%88%D8%A7-%D8%A8%D9%85%D8%AC%D9%84%D8%B3-%D8%A7%D9%84%D8%A3%D9%85%D9%86---%C2%AB%D9%81%D9%8A%D8%AA%D9%88%C2%BB-%D8%A3%D9%85%D8%B1%D9%8A%D9%83.aspx
இப்படி பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மட்டும் தனிப்படுவது அபூர்வமானது. எனவே எகிப்தின் பிரேரணை உலகிலிருந்தே அமெரிக்காவை தனிமைப் படுத்தி விட்டது.
ஜோர்தானில் மன்னர் அப்துல்லாஹ்வும் பிரான்ஸ் ஜனாதிபதியும் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து பேசும் வீடியோ :
கவலை என்னவென்றால், ஸவூதி, குவைத், எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற சில நாடுகளின் எதிர்ப்பு அரச தலைவர்கள் மட்டத்தில் பலமாக இருக்கவில்லை என்பது தான்.
உலக நாடுகளின் இந்த அமெரிக்க எதிர்ப்பு தொடருமானால் இன்ஷா அல்லாஹ் பலஸ்தீனுக்கு நல்ல காலம் பிறக்கலாம். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
(மேலே உள்ள எகிப்து அல் அஹ்ராம் பத்திரிகையில் விமர்சன பகுதியில் உள்ள ஒரு செய்தி மிக முக்கியமானது என்பதால் இங்கே தருகின்றோம் :
முஸ்லிம்களுக்கு முன் யூதர்கள் பலஸ்தீனில் இருந்தார்கள் என்பதற்காக அது இஸ்ரேலுக்குரியது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாயின், அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்த செவ்விந்தியர்களுக்கு அமெரிக்காவைக் கொடுத்துவிட்டு, அமெரிக்கர்கள் வெளியேறிவிட வேண்டும். இவ்வாதத்தின்படி ஆரம்ப குடியினருக்குத்தான் ஒரு நாடு சொந்தம் என்றால், யபூஸிய்யா என்ற கன்ஆன் வர்க்கத்தைச் சேர்ந்த அரபு இனத்தவர்கள் தான் அல்குத்ஸில் 2000 வருடங்கள் முதலாவதாக வசித்தார்கள்
பின்னர் யூதர்கள் 414 வருடங்களும்,
பாரசீகர்கள் 254 வருடங்களும்,
இக்ரீக்கீன்கள் 270 வருடங்களும்,
ரோமர்கள் 700 வருடங்களும்,
அரபு முஸ்லிம்கள் 1400 வருடங்களும்
அல் குத்ஸில் வசிக்கிறார்கள். அப்படியாயின், பழமை என்ற வகையிலும் அல் குத்ஸ் அரபிகளுக்கே சொந்தம்.
அதிக காலம் வசித்தவர்கள் என்ற வகையிலும் ( 2000 + 1400 = 3400 ) அரபிகளுக்கே அல் குத்ஸ் சொந்தமாகின்றது !!! எனவே குத்ஸின் வரலாற்றைத் திரிக்கும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் முயற்சிகள் பொய்யானவையே. உலகம் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாது).
19.12.2017

Wednesday, December 13, 2017

யமன் விவகாரம் மிகச் சுருக்கமாக

யமன் விவகாரம் மிகச் சுருக்கமாக
யெமன் மத்ஹபு தரீக்களை பின்பற்றும் ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர் அதிகமாக வாழும் ஒரு நாடு. பல ஹதீஸ்கள் மூலம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அர்களால் பாராட்டப்பட்ட நாடு.
                அல்லாஹ்வைப் பற்றிய அக்கீதாவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டறிந்த பிரபலமான ஸஹாபியான அபூ மூஸா அல் அஷ்அரி (ரழி) அவர்களின் நாடு. ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களின் பிராத்தனையின் பொருட்டால், அந்த ஸஹாபியின் வழித் தோன்றலில் பிறந்தவர்களே நாம் பின்பற்றும் அக்கீதாவை தொகுத்து தந்த  அஷ்அரி இமாம் அவர்கள்.
உலக முடிவின் ஆரம்பமாக பிரமாண்டமான ஒரு நெருப்பு யமனில் உள்ள அதன்   (عدن)  என்ற இடத்தில் வெளியாகி, பின்னர் உலகில் எல்லா நாடுகளிலும் வெளியாகி உலக மக்கள் அனைவரையும் சாம் தேசத்தை நோக்கி ஓடச்செய்யும். அது தான் மஹ்ஷர் மைதானம் என்று அழைக்கப்படுகின்றது.
யெமனில் யஹ்யா பின் ஹுஸைன் என்ற தளபதி சீஆ ஸைதிய்யா ஆட்சியை ஸதாபித்தார். (இறப்பு : 298 ஹிஜ்ரி). பின்னர் பலவிதமான ஆட்சிமாற்றங்கள் ஏற்பட்டாலும் பொதுவாக சுமார் ஆயிரம் (1000) வருடங்கள் யெமனை சீஆ ஸைதிய்யாக்கள் ஆட்சி செய்தனர். ஸுன்னத்து வல்ஜமாஅத்து கொள்கைக்கு மிக அண்மையில் உள்ள சீஆக்களே ஸைதிய்யாக்கள். சகல ஸஹாபாக்களையும் மதிப்பர். ஆனால் அலி (ரழி) அவர்களை அதிகம் மதிப்பர்.
ஸைதியாக்களின் ஆட்சியின் இறுதிப் பகுதியில் கோத்திரச் சண்டைகள் , ஏராளமான யுத்தங்கள் ஏற்பட்டு இறுதியில் நாடு பிளவுபட்டது.
1968 இல் ஓரே யெமன் அமைக்கும் முயற்சிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. 1978 வரை ஏராளமான ஒற்றுமை முயற்சிகளும், இடையில் பிளவுபடுவதுமாக இருந்து, 1978 ஜூன் 13 இல் அலி அப்துல்லாஹ் ஸாலிஹ் வட யெமனில் ஆட்சிப் பொறுப்பேற்றார். தென் யெமனை அப்துல் பத்தாஹ் இஸ்மாயில் ஆட்சி செய்தார்.
28.3.1979 குவைத்தின் முயற்சியால் இரண்டு யெமனையும் ஒன்றிணைக்கும் பிரகடனம் வெளியிடப்பட்டது. எனினும் இடையிடையே பல தடவைகள் பிளவு பட்டன. 22.5.1990 இல் அலி ஸாலிஹின் தலைமையில் ஒரே யமன் அமைக்கப்பட்டது.
ஈரானில் குமைனியின் தலைமையில் தீவிரவாத சீஆ ஆட்சி ஏற்பட்ட பின்னர், அதிகமான மிதவாத ஸைதிய்யா சீஆக்கள் ஈரானில் இலவசமாக கல்வி புகட்டப்பட்டு, தீவிரவாத சீஆக்களாக மாற்றப்பட்டனர்.
அலி ஸாலிஹின் அரசாங்கம் வஹாபிகளின் எழுச்சியை கட்டுப்படுத்தவில்லை, என்றும், இதனால் ரஸூலுல்லாஹ்வின் (ஸல்) குடும்பத்தவர்களுக்கு வஹாபிகளால் பெரும் அச்சுருத்தல் என்றும் அடிக்கடி குற்றம் சுமத்தி வந்த தீவிரவாத சீஆக்கள், இறுதியில் வட யெமனில் " அன்ஸாருல்லாஹ்" என்ற பெயரில் போராட்ட குழுவை 1992 இல் ஸ்தாபித்தனர். அதன் தலைவரான பத்ருத்தீன் ஹோஸியின் பெயரால் அவ்வியக்கம் " ஹோஸி " என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இப்போது அவரின் மகன் அப்துல் மலிக் ஹோஸி தலைமை தாங்குகிறார். ஈரான் சகல விதமான பொருளாதார, ஆயுத உதவிகளையும் வழங்குகின்றது.
மற்ற அரபு தலைவர்களைப் போலவே ,ஜனாதிபதி அலி ஸாலிஹும் ,வஹாபியத்தை அழிக்காமல் பராமுகமாக இருந்தார் என்பதற்கு எனது ஒரு சம்பவத்தை கூறுவது பொருத்தம் என நினைக்கிறேன். 2002 இல் நான் யெமன் போயிருந்த போது, வரும் வழியில் தலைநகர் ஸன்ஆவில் உள்ள ஜாமிஅத்துல் ஈமான் என்ற வஹாபி சார்பு பல்கலைக் கழகத்தில் படிக்கும் ஒருவரைச் சந்திக்கப் போனேன். ஒரு பொலிஸ் காரரிடம் , ஜாமிஅத்துல் ஈமான் எங்கே எனக் கேட்டேன். அவர் திடுக்கிட்டவர் போல் " பின் லாதன் ?" என்று ஆச்சரியமாகக் கேட்டார். எனக்கும் பயம் ஏற்பட்டு விட்டது. (அப்போது தான் பின்லாடன் அமெரிக்காவைத் தாக்கி சில மாதங்கள் ஆகிவிட்டன. அவரை அமெரிக்கா தேடும் காலம் அது ). நான் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, எனது குவைத் பல்கலைக்கழக தஸ்தாவேஜுகளைக் காட்டவே, எனக்கு அவர் வழியைக் காட்டினார். பின்லாடன் ஆரம்பத்தில் இருந்தது யமனில் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் கவனயீனத்தினால் தான், யெமனில் வஹாபி பல்கலைக்கழகம் உருவானது, கவாரிஜ் வஹாபிகள் அவரையே தாக்கும் அளவுக்கு முன்னேறினார்கள்.
                2011 இல் அரபுலகில் ஏற்பட்ட கவாரிஜ் வஹாபிகளின் பயங்கரவாத ஆயுதப் போராட்டத்தில் ஜனாதிபதி அலி ஸாலிஹின் மஸ்ஜித் கவாரிஜ் வஹாபிகளால் தாக்கப்பட்டு, அவர் மயிரிழையில் உயிர் தப்பினார். ஸவூதிக்கு தப்பிச் சென்று சிகிச்சை பெற்றார் , பின்னர்  25.2.2012 அப்து ரப்பு மன்ஸூர் தேர்தல் மூலம் ஜனாதிபதியனானார்.
                ஹோஸி (சீஆக்)களின் சக்தி நாளுக்கு நாள் அதிகரிக்கவே, முன்னாள் ஜனாதிபதி ஹோஸிகளுடன் கூட்டுச் சேர்ந்தார். (இதை வைத்து இலங்கையில் சில வஹாபிகள் அவர் சீஆ ஆதரவு என்று கூறுவது தவறானது. அரசியலுக்காகவே கூட்டுச் சேர்ந்தார்)
                இப்படியாக இரு பிரதான கட்சியினரும் ஒன்று சேர்ந்ததால்,  லெபனான், ஸிரியா, இராக் முதலிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம் ஏற்பட்டது போன்று யெமனிலும் ஈரான் ஆதிக்கம் வந்தால் , அது வளை குடா மற்றும் எகிப்து போன்ற நாடுகளுக்கு பேராபத்து எனக் கருதிய 17 அரபு நாடுகள், ஸவூதியின் தலைமையில் ஹோஸிகளை எதிர்த்து 25.3.2015 முதல்  عاصفة الحزم  ( பலமான புயல் ) என்ற பெயரில் கொடூரமான விமானத்தாக்குதல் நடாத்தி வருகின்றன. பல இலட்சம் பொதுமக்களும் சிறுவர்களும் பலியாகியும், பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
                அலி ஸாலிஹ் ஹோஸிகளுடன் கூட்டுச் சேர்ந்தாலும்கூட, அவர்களோ , அல்லது தாக்குதல் நடாத்தும் அரபு நாடுகளோ யுத்தத்தை வெல்ல முடிய வில்லை. அவரை எப்படியாவது தம் பக்கம் திருப்பினால், அவரின் படைகளுடன் சேர்ந்து ஹோஸிகளை அழிக்கலாம் என்று ஸவூதி எமிரேட்ஸ் என்பன திட்டமிட்டு, காய் நகர்த்தின. இதன் பலனாக அலி ஸாலிஹ் ஹோஸிகளுடனான தனது மூன்று வருட உறவை முறித்துக்கொண்டு, திடீர் என்று 1.12.2017 இல் (மூன்று வருடங்களாக தம்மைத் தாக்கும்) அரபு நாடுகளின் பக்கம் சேந்தார்.
                திடீர் என்று அலி ஸாலிஹ் ஹோஸிகளை எதிர்த்து பேசுவது (வீடியோ) :
https://www.youtube.com/watch?v=tI2GuJagal0
                இந்த நிலைமை பயங்கரமானது, அரபு நாடுகளும் அலி ஸாலிஹின் படைகளும் சேர்ந்து தாக்கினால் தாம் அழிவது உறுதி எனப்பயந்த ஹோஸிகள் , அவர் கட்சி மாறி மூன்றே நாட்களில் அவரைப் படுகொலை செய்தனர்.
                அவர் ஸன்ஆ தலைநகரிலிருந்து தப்பிப் போகும் போதே படுகொலை செய்யப்பட்டதாக ஆரம்ப செய்திகள் கூறினாலும், அவரின் வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டதாக பிந்திய செய்திகள் கூறுகின்றன.
                அவரின் மறைவுடன் அரபு நாட்டுப் படைகள் ஹோஸிகளைப் பலமாகத் தாக்கி வருகின்றன. முடிவு அல்லாஹு அஃலம். ஸுன்னத்து வல்ஜமாஅத்துக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக வேண்டும் என்று பிராத்திப்போம்.
13.12.2017

Tuesday, November 14, 2017

அரபுலகில் நடப்பதென்ன?

அரபுலகில் அதிரடி மாற்றங்கள் (2)
( ஊடகங்களின் ஊடாக அரபுலகம் )
மத்திய கிழக்கில் இன்று நடப்பவற்றை உலகப் பத்திரிகைகள் பல கோணங்களில் ஆராய்கின்றன. அவற்றின் கண்ணோட்டத்தில் செய்திகளின் சாராம்சம் இது :
                பலஸ்தீன் மண்ணை யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேலை உருவாக்கியது முதல் அதுவே மத்திய கிழக்கின் பிரதான பிரச்சினையாக இருந்தது. பல யுத்தங்களை அது உருவாக்கியது.
                ஸதாம் குவைத்தை ஆக்கிரமித்தது முதல் பிரச்சினை வேறு உருவம் பெற்றது. தூர இருந்த அமெரிக்காவும் ஐரோப்பிய வல்லரசுகளும் மத்திய கிழக்கில் நிரந்தர இடம் பிடித்துக் கொண்டன. பலஸ்தீனரின் உரிமைப் போராட்டம் வலுவிழந்தது.
                இராக்கில் அமெரிக்கா நிரந்தர இடம் பிடித்தது முதல் இராக், ஸிரியா, எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் கொள்கை பிரச்சார ரீதியாக மட்டும் இருந்த கவாரிஜ் வஹாபிகளை ISIS பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா மாற்றியது. அமெரிக்காவுக்கு உதவியாக கட்டார், துருக்கி, ஸவூதி போன்ற நாடுகள் ISIS க்கு சகல உதவிகளையும் வழங்கின. இப்படியாக ISIS வஹாபிகள் மூலம் அரபுலகை ஆக்கிரமிக்க அமெரிக்க வகுத்த திட்டம் , திடீர் என்று ஸிரியா சார்பாக ரஷ்யாவின் தலையீட்டின் காரணமாக, அமெரிக்காவும் ISIS உம் படுதோழ்வியைத் தழுவின.
                இப்போது ஸிரியாவின் போக்மால் பிரதேசத்திலும், இராக்கின் ராவா பிரதேசத்திலும் மட்டும் அமெரிக்க உதவியுடன் ISIS இரண்டு நாடுகளினதும் இராணுவங்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றது. இராக்குக்கும் ஸிரியாவுக்கும் இடையில் உள்ள யூபிரட்டீஸ் நதியை அடுத்துள்ள போக்மால் பிரதேசத்தில் ISIS க்கு அமெரிக்கா பகிரங்கமாகவே உதவி வருகின்றதை ரஷ்யா அம்பலப் படுத்தியுள்ளது.  அமெரிக்கா தீவிரமாக தலையிடாவிட்டால் ஸிரியாவிலிருந்து எதிர்காலத்தில் ISIS முற்றாக அழிக்கப்படக்கூடிய சாத்தியங்களே உள்ளன.
                இப்படியாக ISIS இன் முடிவு காலம் நெருங்கி வருவதுடன், ஸவூதியின் உதவியுடன் இன்னொரு மத்திய கிழக்கு யுத்தத்தை ஆரம்பிக்க அமெரிக்கா தீவிரமாக செயல்படுகிறது.  ஸவூதிக்கும், ஏனைய ஸுன்னி நாடுகளுக்கும் சவாலாக வளர்ந்து வரும் சீஆ சக்தியான ஈரானை அழிக்க வேண்டும், லெபனானில் உள்ள ஈரான் சார்பு பலம் வாய்ந்த ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ்வை அழிக்க வேண்டும் என்பதுவே ஸவூதி, எமிரேட்ஸ், அமெரிக்கா முதலிய நாடுகளின் திட்டம்.
                இதன் ஆரம்ப கட்டமாகத்தான், ஈரான் சார்பு லெபனான் பிரதமர் ஸஅத் அல் ஹரீரியை திடீரென்று ஸவூதிக்கு வரவழைத்து, பலாத்காரமாக அவரை பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவிக்க வைத்தது ஸவூதி அரசு. அது மட்டுமல்ல, ஈரானுக்கும் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் எதிராக ஸவூதியில் இருந்து அவரைப் பேச வைத்தது ஸவூதி.
                லெபனானைத் தாக்கி, ஈரான் சார்பு ஹிஸ்புல்லாஹ்வை அழிக்கும் நோக்கில், லெபனானில் உள்ள ஸவூதி, குவைத், பஹ்ரைன், எமிரேட்ஸ், அமெரிக்க பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அந்நாடுகள் பணித்தன.
                ஆனால் உலக நாடுகளின் எதிர்ப்புகள் காரணமாக, இன்னும் ஓரிரு நாட்களில் ஹரீரியை லெபனானுக்கு போக அனுமதிக்கும் நிலைக்கு ஸவூதி தள்ளப்பட்டுள்ளது.
                யெமனிலிருந்து ஸவூதியில் உள்ள மன்னர் காலித் விமான நிலையத்தை நோக்கி ஏவப்பட்ட பாலஸ்டிக் ஏவுகணை ஈரானின் உற்பத்தியே என்பது ஸவூதியின் குற்றச்சாட்டு. இதனையடுத்தே உடனடியாக ஈரானின் இராணுவ சக்தியை அழிக்க வேண்டும் என்று ஸவூதி தீர்மானித்தது.
                ஈரானில் 500 மீட்டர் நிலத்துக்கடியில் உள்ள ஏவுகணை உற்பத்தி நிலையத்தில் 1700 கி.மீ. சென்று தாக்கக்கூடிய நவீன ரக ஏவுகணைகள் இருப்பதை அண்மையில் ஈரான் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டது.
                லெபனானில் உள்ள ஈரான் சார்பு ஹிஸ்புல்லாஹ்விடம் இஸ்ரேலைத் தாக்கும் ஆற்றல் மிக்க 1,40,000 க்கும் அதிகமான ஏவுகணைகள் உள்ளன. ஹிஸ்புல்லாஹ் இப்படியான ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பலஸ்தீனின் ஹைபா f  பிரதேசத்தை தாக்கினால், அங்கு இஸ்ரேல் நிறுவியுள்ள அமோனியா தொழிற்சாலையில் இருந்து அணு குண்டுகள் வெடித்து பல இலட்சம் இஸ்ரேலியர்கள் பலியாகலாம் என்று அண்மையில் இஸ்ரேல் அச்சம் தெரிவித்துள்ளது.
                ஸிரியா, லெபனான், ஈராக், யெமன் முதலிய நாடுகளில் ஈரானின் ஆதிக்கம்
 நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், ஈரானையும் ஸிரியாவையும், ஹிஸ்புல்லாஹ்வையும் அழித்தால் தான் இஸ்ரேல் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று அது கருதுகிறது.
                ஸவூதியிலும், இஸ்ரேலிலும் ஈரான், ஹிஸ்புல்லாஹ்வுக்கு நிகரான ஆயுத பலம் இருந்தாலும், யுத்தத்தை ஆரம்பித்தால் அது எந்த திசைக்கு திரும்புமோ என்பதே ஸவூதிக்கு உள்ள அச்சம். ஒரு வேளை துருக்கி, ரஷ்யா என்பன ஈரான் சார்பாக  நின்றால், யுத்தம் பல மாதங்கள் நீடித்து ஸவூதிக்கும் இஸ்ரேலுக்கும் பேரழிவு ஏற்படலாம் என்று இரு நாடுகளும் சிந்திக்கின்றன. எனவே இப்போது சூழ்ந்துள்ள போர் மேகங்கள் இடி முழக்கத்துடன் யுத்தமாக வெடிக்குமா அல்லது "யார் யாருடன் இணைகிறார்கள்" என்று பார்க்க சும்மா ஒரு "ஷோ" வுடன் அமைதியடையுமா என்பதை எதிர்வரும் நாட்களில் காணலாம்.
                மத்திய கிழக்கு நாடுகள் இஸ்லாம் என்ற குடையின் கீழ் ஒன்றுபட்டு, இஸ்ரேலை அழிக்கக்கூடிய சக்தியைப் பெற பல "தடை"களை கடக்க வேண்டியுள்ளது. ஆனால், அதில் முதலாவது தடை : ஸுன்னி நாடுகளில் சீஆக் கொள்கையை பரப்பி, அந்நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சிப்பதே என்பதே எமது கருத்து. ஈரான் தனது அந்த "கொள்கை விஸ்தீரண"  போக்கை கைவிட்டால், மற்றத் தடைகளை இலகுவில் பேசித் தீர்க்கலாம். வஹாபியத்திலிருந்து ISIS உருவாகி தமது அரசுகளுக்கே ஆபத்து வந்தது என்பதை ஸுன்னி நாடுகள் இப்போது உணர்ந்து, வஹாபியத்தை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதால், ஈரானும் தனது "கொள்கை பரப்பும்" பணியை நிறுத்திக் கொண்டால் தீர்வுகளுக்கான வழிகள் திறபடலாம்.
கவாரிஜ் வஹாபியத்தும் சீஆ கொள்கையுமே மத்திய கிழக்கு நாடுகள் இந்த அளவு மோசமான வீழ்ச்சியடையக் காரணம். 1300 வருடங்கள் இருந்தது போன்று, மத்ஹபு, தரீக்கா (தஸவ்வுப்) இஸ்லாம் மட்டுமே தீர்வுக்கு வழி.
14.11.2017

Monday, November 13, 2017

அரபுலகில் நடப்பது என்ன?

அரபுலகில் அதிரடி மாற்றங்கள்
2011 முதல் எகிப்து, இராக், ஸிரியா, லிபியா முதலிய அரபு நாடுகளில் துருக்கி, கட்டார், அமெரிக்கா தலைமையில் நடந்த "கவாரிஜ் வஹாபி" களின் பயங்கரவாத புரட்சிகளை இலங்கையில் உள்ள வஹாபி சார்பு பத்திரிகைகள் போற்றிப் புகழ்ந்து பல வருடங்களாக தினமும் எழுதி வந்ததையும், அந்தப் பொய் புளுகு மூட்டைகளை அதிகமான இலங்கை முஸ்லிம்கள் (ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களும்) தமது தலைகளில் நிரப்பியதை இப்போது மீண்டும் நினைவூட்டுவது பொருத்தம் என நினைக்கிறேன்.
ஆனால் "ஸிரியா வெல்லும் என்றும், கட்டார், துருக்கி, அமெரிக்கா தலைமையிலான கவாரிஜ் வஹாபிகள் தோழ்வியடைவர்" என்றும் 2011 முதல் நாம் எமது நெட் ஊடகம் மூலம் தொடர்ந்து எழுதி வந்த விதமே இறுதியாக இப்போது கவாரிஜ் வஹாபி ISS பயங்கரவாதிகள் படுதோழ்வியடைந்து ஸிரிய அரசு தலை நிமிர்ந்து இருப்பதையும் அனைவரும் காண முடியும்.
இதை ஏன் மீண்டும் இங்கே நினைவூட்டுகிறேன் என்றால், அடுத்து மத்திய கிழக்கில்  நடக்கப் போகும் மாற்றங்கள் குறித்தும் இலங்கையின் வஹாபி ஊடகங்களின் "இயக்க சார்பு பொய் புளுகு மூட்டைகளை" முஸ்லிம்கள் வாசித்து நம்பினால், மீண்டும் உலக விவகாரத்தில் நீங்கள் ஏமாளிகளாக்கப் படுவீர்கள் என்பதை எச்சரிப்பதற்காகத்தான்.
எமது "மத்திய கிழக்கு ஆய்வுகள்" இரண்டு பிரதான அடிப்படைகளைப் பின்பற்றியே நாம் எழுதுகிறோம்.
ஒன்று : மத்திய கிழக்கில் கடைசி காலத்தில் என்ன நடக்கும் என்று ஏராளமான ஹதீஸ் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் நாம் நடப்புகளை ஒப்பிட்டு எழுதுகிறோம்.
இரண்டு : ஒன்றுக்கொன்று முரணான ஏராளமான உலகப் பத்திரிகைகளின் செய்திகளை ஒப்பிட்டு, "உண்மையில் நடந்தது என்ன" என்று கண்டுபிடித்து எழுகிறோம்.
அதனால் தான், ஸதாம் – ஈரான் யுத்தத்தின் போதும்,
ஸதாம் – குவைத் யுத்தத்தின் போதும்,
ஸிஸி -, கவாரிஜ் முர்ஸி யுத்தத்தின் போதும்,
வஹாபி ISS – இராக் யுத்தத்தின் போதும்,
வஹாபி ISS – ஸிரியா யுத்தத்தின் போதும்
நாம் தொடர்ந்து பல வடங்களாக எழுதியவை "மத்திய கிழக்கின் உண்மை வரலாறாகவும்"
வஹாபி பத்திரிகைகள் பல வருடங்களாக எழுதியவை "குப்பைத் தொட்டியில் போட வேண்டியவையாகவும்" ஆகிவிட்டன.
சரி,
இப்போது கட்டார், துருக்கி, ஸவூதி, ஈரான், லெபனான், அமெரிக்கா, இஸ்ரேல் சம்பந்தமாக புதிய மாற்றங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் உலக ஊடகங்கள் மூலம் கேள்விப்படுகிறீர்கள். அந்த மாற்றங்களின் உண்மைத் தன்மை என்னவென்று அறிய ஆவலாய் இருப்பீர்கள்.
(தொடரும்)
13.11.2017

Wednesday, October 4, 2017

ஆசூராக் கந்தூரி, ஓர் அறிமுகம்

ஆசூராக் கந்தூரி – ஓர் அறிமுகம்.
கஷ்டோவிட்டி அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில் (ஆண்கள் பாடசாலைக்கு அண்மையில்) நாளை 05.10.2017 வியாழக்கிழமை 78 ம் வருட ஆசூராக் கந்தூரி நடைபெறுகின்றது. காலை 10.00 மணிக்கு மௌலிது ஓதும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்து, அதன் பரக்கத்தினை பெற்றுக் கொள்வீர்களாக.
                சுமார் 78 வருடங்களுக்கு முன்னர் இப்பிரதேசத்தைச் சேர்ந்த பல ஊர்களில் வைசூரி என்றழைக்கப் படுகின்ற பெரியம்மை நோய் தீவிரமாகப் பரவி, அதனால் பலர் மரணத்தை தழுவினார்கள். அப்போது எமது தகப்பனார் அப்துல் ஹபீழ் ஆலிம் அவர்கள், நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்களின் மகத்துவங்களை (அவர்களுக்கு அல்லாஹு தஆலா கொடுத்த சிறப்புக்களை) எடுத்து விளக்கும் மௌலிது மஜ்லிஸை அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யாவில் ஆரம்பித்து, அவர்களின் பொருட்டால் இப்படியான பயங்கர ஆட்கொல்லி நோய்கள் இங்கு வராமல் பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் துஆ கேட்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அல்லாஹ்வின் கிருபையால் அதன் பின்னர் இப்பகுதியில் அப்படியான பயங்கர தொற்று நோய்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
                துல் ஹஜ் மாதம் கடைசிப் பகுதியில் ஆரம்பித்து, வெள்ளிக் கிழமை நீங்கலாக 11 நாட்கள் மத்ரஸாவில் சுமார் 20 மௌலிதுகள் ஓதப்பட்டு , முஹர்ரம் மாதத்தில் பெரிய கந்தூரி நடைபெறும். 11 நாட்கள் ஓதப்படும் மௌலிகளில், ஆரம்பமாக, இமாம் தைபஈ    (ديبعي) (ரஹ்) அவர்கள் திரட்டிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகத்துவங்களை விபரிக்கும் மௌலிதும், ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மகத்துவங்களை விபரிக்கும் அவர்களின் மௌலிதும் , யாஸீனும் ஓதப்படுகின்றன. அஹ்லு பைத்துகள் (ரழி) மௌலிது, பத்ரு , உஹ்து ஸஹாபாக்கள் (ரழி) மௌலிது, சாபிஈ இமாம் (ரஹ்) மௌலிது, புகாரி இமாம் (ரஹ்) மௌலிது, குத்பு நாயகம் (ரழி), சாதுலி நாயகம் (ரழி), ரிபாஈ நாயகம் (ரழி), இன்னும் பல அவ்லியாக்களின் மௌலிதுகளும் அல்லாஹ் கிருபையால் ஓதப்படுகின்றன. சில வருடங்களாக பெண்களின் தலைப்பாத்திஹா ஓதும் வைபவமும் ஒரு நாள் நடைபெறுகின்றது.
ஆசூரா நோன்பிரவன்று பத்ரு ஸஹாபாக்களின் மௌலிதும், பெரிய கந்தூரி அன்று தலைப்பாத்திஹாவும் ஓதப்பட்டு, நார்சா விநியோகிக்கப்படும். இக்கந்தூரிக்கான சகல செலவினங்களும் இவ்வூரையும் வெளியூர்களையும் சேர்ந்த நல்ல உள்ளம் படைத்த பரோபகாரிகளால் நடைபெறுகின்றன.
இங்கு ஓதப்படும் மௌலிதுகளுக்கு உரிய நபிமார்கள், ஸஹாபாக்கள், அவ்லியாக்களின் பொருட்டால் ரஹ்மானாகிய அல்லாஹ் இவ்வூராரையும் மற்றவர்களையும் பயங்கர தொற்று நோய்களை விட்டும் பாதுகாப்பானாகவும். ஆமீன்.
அப்துல் பாரி அப்துல் ஹபீழ் ஆலிம்
04.10.2014

Sunday, October 1, 2017

ஆட்கொல்லி 'ஸெண்ட்'

3 நாட்களில் கொல்லும் 'ஸெண்ட்'
எகிப்து, இராக், குவைத், பஹ்ரைன், லெபனான், சூடான் முதலிய நாடுகளில் நஞ்சு கலந்த ஒரு வித அத்தர் (ஸெண்ட்) மார்கட்டுகளை ஆக்கிரமித்துள்ளதாம். 'ரிலக்ஸ்' என்ற பெயரில் வந்துள்ள இந்த ஸெண்ட் அதனை உடம்பில் பூசியவரை 3 அல்லது 4 நாட்களில் கொன்று விடுமாம். அவற்றை கண்டு பிடித்து உடனடியாக சந்தையிலிருந்து அகற்றி விடும்படி அந்நாடுகளின் அரசாங்கங்கள் வர்த்தக அமைச்சுகளுக்கு கட்டளை பிறப்பித்துள்ளதாம்.
                இஸ்லாம் அறிமுகப் படுத்திய, ஸுன்னத்தாக்கிய ஹலாலான அத்தர்களை விட்டுவிட்டு,
'நவீனம்' என்ற இருட்டில் மூழ்கி தத்தளிக்கும் 'அறிவு கெட்ட' இளைஞர்களே யஹூதி நஸாராக்களின் உற்பத்தியாகிய இந்த 'ஆட்கொல்லி' ஸெண்டுகளினால் பலியாகிறார்கள். இளைஞர்களே விழிப்படையுங்கள். ஹலாலான அத்தர் வகைகளை உபயோகியுங்கள். பல வித பிரயோசனங்களும் பெற்று அல்லாஹ்விடத்தில் ஸவாபும் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
1.10.2017

Wednesday, September 27, 2017

Interpole இல் பலஸ்தீன்

பலஸ்தீன் : ஒரு நல்ல செய்தி !
பலஸ்தீன் நாட்டுக்கு இண்டர் போல் ( Interpole ) அமைப்பில் இன்று முதல் அங்கத்துவம் கிடைத்துள்ளது. சர்வதேச பொலிஸ் அமைப்பு  International Police Organization இண்டர் போல் என்று சுருக்கமாக இழைக்கப் படுகிறது. இன்று புதன் கிழமை சீனாவின் தலைநகரான பீக்கிங் இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பலஸ்னை அந்த அமைப்பில் சேர்த்துதுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 133 நாடுகள் அங்கம் வகிக்கும் Interpole  அமைப்பில் 75 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
                பலஸ்தீன் அதில் இணைவதை இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது. அதில் சேருவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்கும்படி அமெரிக்கா பலஸ்தீன் தலைவரை கடுமையாக வற்புறுத்தியது. ஆனால்  அமெரிக்க பயமுறுத்தலை பலஸ்தீன் மதிக்கவில்லை.
                Interpole இல் பலஸ்தீன் ஒரு அங்கத்துவ நாடாக இணைவதால், பலஸ்தீன் உரிமை இன்னும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப் படுவது மட்டுமல்ல, பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலின் எந்த அதிகாரியாவது பயங்கரவாதம் முதலிய நடவடிக்கைகளில்  ஈடுபட்டால், அவரை உலகில் எங்கிருந்தாலும் உலக நாடுகளின் பொலிஸ் துணையுடன் கைது செய்யும் உரிமை பலஸ்தீனுக்கு கிடைக்கிறது. இதனால் தான் பலஸ்தீன் அதில் சேருவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வந்தது.
                ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவில் இன்று நடந்த அதன் கூட்டத்தில் பலஸ்தீனுக்கு இண்டர்போல் உறுப்புரிமை கிடைத்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
இது சம்பந்தப்பட்ட சர்வதேச பத்திரிகையான ரஷ்யா டுடே பத்திரிகையின் செய்தி :
27.9.2017

Friday, September 15, 2017

மியன்மாரும் இக்வான் புழுகுகளும்

மியன்மாரில் நடப்பது என்ன?
மியன்மாரில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பௌத்த பயங்கரவாதிகள் நடாத்தும் கொடூரமான தாக்குதல்களை இலங்கையில் உள்ள வழிகெட்ட இக்வானுல் முஸ்லிமீன் ஆதரவாளர்கள் தமது இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த முனைகிறார்கள். ஸிரியா, இராக், மிஸ்ரில் 2011 முதல் நடக்கும் கவாரிஜ் இக்வான்களின் மனிதப் படுகொலைகளை தமக்குச் சார்பாக பத்திரிகைகளில் எழுதிவந்த அவர்கள் இப்போது மியன்மார் பிரச்சினையையும் பொய்களை இட்டுக்கட்டி பிரசுரித்து தமது இயக்கத்தை வளர்க்க பயன்படுத்துகிறார்கள்.
எங்கோ என்றோ சண்டைக் காட்சிகளை இப்போது மியன்மாரை துருக்கி தாக்குவதாக சோடித்து பிரசுரித்து வாசகர்களை Brain wash ( Brain waste ) செய்ய முனைகிறார்கள்.
கடந்த வாரம் முதல் பேஸ்புக் முதலிய சில  ஊடகங்களில் பரபரப்பான ஒரு செய்தி :
" துருக்கி இராணுவம் மியன்மாரைத் தாக்கிக் கொண்டிருக்கிறது "
 பலரும் நேரடியாகவும் டெலிபோன் மூலமும் என்னிடம் கேட்டார்கள் இது பற்றி. நான் சொன்னேன், அப்படி ஒன்றும் பிரபலமான உலகப் பத்திரிகைகளில் வரவில்லையே என்று. அவர்களும் விடவில்லை. "இது இப்போது நேரடியாக வீடியோ காட்டப்படுகிறது" என்று உறுதியாக அடித்துக் கூறினார்கள். எனக்கு ஆச்சரியம். பல கோணங்களில் உள்ள பல நாட்டு செய்திகளை (முக்கியமாக முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டவை) தினமும் பல உலகப் பத்திரிகைகளில் வாசிக்கும் எனக்கு அகப்படாத செய்தியா என்று ஆச்சரியம்.
                மியன்மாரில் நடக்கும் இன ஒழிப்பு கொடூரத்தை உலகில் உள்ள (சில நாடுகள் தவிர) அனேகமான நாடுகள் கணடித்துக்கொண்டுதான் இருக்கின்றன. அதில் துருக்கியும் ஒன்று. ஆனால் துருக்கி இராணுவம் மியன்மாரைத் தாக்கிக் கோண்டிருப்பதான வீடியோ செய்தி தான் பரபரப்பாக பேசப்படுகிறது. ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களும் இதனை முழுமையாக நம்பி மகிழ்ச்சியடைகிறார்கள்.
                மியன்மாரில் உள்ள அப்பாவி  முஸ்லிம்களை கொன்று குவிக்கும் பயங்கரவாதிகளை முஸ்லிம் நாடுகள் ஒன்று திரண்டு தாக்கி அழிக்க வேண்டாமா என்பது எமதும் விருப்பம் தான். ஆனால் அப்படி முஸ்லிம் நாடுகள் இராணுவத் தாக்குதலில் ஈடுபடாமல் இருக்கும் போது, துருக்கியை விசேசமாக குறிப்பிட்டு, துருக்கி இராணுவம் மியன்மாரைத் தாக்குவதாக எங்கிருந்து செய்தி வந்தது?
                இது தான் கவாரிஜ்களான இக்வான் வஹாபிகளின் கைவரிசை ! துருக்கி அர்துகான் ஒரு இக்வான் ஆதரவாளர் என்பதால் (கரழாவியை ஆதரிப்பவர் என்பதால்), அவரை முஸ்லிம்களின் தலைவராக சித்தரிக்க வேண்டும் என்பது இக்வான்களின் குறிக்கோள்.
                இக்வான்கள் இது மட்டுமா செய்தார்கள்? உலகில் உள்ள ஸுன்னத்து வல்ஜமாஅத்து (விவரமறியாத) முஸ்லிம்களும் அர்துகானை தலைவராக புகழ வேண்டும் என்பதற்காக கடந்த காலங்களில் பெரிய ஒரு பிரச்சாரத்தை கொண்டுபோனார்கள். " அர்துகான் நக்ஷபந்தியா தரீக்காவைச் சேர்ந்தவராம். அவ்லியாக்களின் ஸியாரங்களுக்கும் போவாராம்" இச் செய்திகளைப் படித்த சிலர் என்னிடம் இது பற்றிக் கேட்ட போது நான் கூறினேன் : இன்றைய அரசியல் நாடகங்களைப் பற்றி அரிச்சுவடியே தெரியாத பாமரர்களை திருத்த முடியாது. தெவட்டகஹ ஸியாரத்துக்கு சென்ற இலங்கை பௌத்த அரசியல் தலைவர்களை "ஸுன்னத்து வல்ஜமாஅத்து" என்று கூறுங்களேன் என்றேன்.
                இனியும் இக்வான்களின் மீடியா குபாடங்களுக்கு பலியாக யாராவது விரும்புவதென்றால் அது அவர்களின் இஷ்டம்.
மியன்மார் பற்றி சில தகவல்கள் :-
பர்மா (மியன்மார்) எல்லைகள்: மேற்கே இந்தியா, பங்களாதேஷ். கிழக்கே தாய்லாந்து, லாஓஸ்.வடக்கே சீனா.தெற்கே வங்காள விரிகுடா. மக்கள் தொகை சுமார் 51 மில்லியன். பரப்பளவு 261227 சதுர மைல்கள். 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்த மியன்மார் 1948 இல் சுதந்திரம் பெற்றது. பின்னர் இராணுவ ஆட்சிக்குட்பட்டு, 2010 இல் நடந்த தேர்தலின் பின்னர் ஓங் ஸன் ஸூ கீ என்ற பெண் ஆட்சிக்கு வந்தார். ஆனால் இராணுவத்தின் பிடியிலேயே நாடு இருக்கிறது. மியன்மாரில் ஜனநாயகத்தை ஏற்படுத்தப் போராடியதற்காக சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற இந்த அரச தலைவி, முஸ்லிம்களை கொன்று குவிக்க பூரண ஆதரவளிப்பது உலக அதிசயமான ஆச்சரியமாக இருக்கிறது.
                பௌத்தர்கள் 87.9 % .  கிறிஸ்தவர்கள் 6.2 % . முஸ்லிம்கள் 4.3 % . மற்றவர்கள் 1.6 % . உலகத்திலேயே மிக அதிகமாக ஒடுக்கப்பட்டு கொடுமைப் படுத்தப் படுவது மியன்மார் ரோஹீன்கா முஸ்லிம்களே என்று .நா. சபையின் அறிக்கையே சான்று பகர்கின்றது. மியன்மார் அரசாங்கம் கூறுவது போல் இன்று நேற்று பங்களாதேசில் இருந்து வந்தவர்கள் அல்லர் இந்த முஸ்லிம்கள். எட்டாம் நூற்றாண்டு முதல் மியன்மாரின் அரகான் மாநிலத்தில் முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள். அப்படியிருந்தும் அவர்களுக்கு குடியுரிமையோ பிற அத்தியாவசிய உரிமைகளோ கொடுக்காமல் அவர்களை மியன்மார் அரசாங்கம் துன்புறுத்திக் கொண்டிருக்கின்றது.
                பெரும்பாலும் எல்லா முஸ்லிம் நாடுகளும் ஏராளமான பிற நாடுகளும் மியன்மார் அரசின் கொடுமைகளை கண்டித்துக் கொண்டுதான் இருக்கின்றன. சில நாடுகள் மனிதாபிமான உதவிகளை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை முஸ்லிம் அகதிகளுக்கு போய்ச் சேராமல் மியன்மார் இராணுவமும் பொலிஸும் தடை செய்கின்றன. ஈரான், ஸவூதி, துருக்கி, எமிரேட்ஸ், குவைத், கட்டார், இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகள் கடந்த வருடம் ஏற்பட்ட இந்தப் பிரச்சினை முதல் முடிந்தளவு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ரஷ்யா, இந்தியா சில ஐரோப்பிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் மியன்மார் அரச கொடுமைகளை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்தனர்.
                மியன்மார் முஸ்லிம்கள் படும் அவஸ்தையை உலகறியச் செய்து , .நா. மூலம் இதனை தீர்க்க அண்மையில் மிஸ்ர் (எகிப்து) இப்பிரச்சினையை .நா. வில் விவாதிக்க வேண்டும் என்று விண்ணப்பத்ததன் காரணமாக நேற்று (13.9.2017) .நா. பாதுகாப்புச்சபை எதியோப்பிய பிரதிநியின் தலைமையில் கூடி , இப்பிரச்சினையை விவாதித்து, மியன்மார் அரசாங்கம் இந்த அடாவடித்தனங்களை நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது.
இது பற்றி ரஷ்யா டுடே என்ற பத்திரிகை வெளியிட்டுள்ள கீழ்வரும் செய்தியில் இரண்டாம் பந்தியில், "எகிப்தின் வேண்டுகோளின் பேரில்بطلب من مصر )  ( என்றுள்ளதை இலங்கையில் உள்ள துருக்கியின் புகழ்பாடும் இக்வான்கள் தமது ஊடகங்களில் வெளியிடத் தயாரா ? உலகில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்களில் மிக சக்தி வாய்ந்த தலைவராக எகிப்து ஜனாதிபதி ஸிஸி இருப்பதால், இந்தச் செய்திகள் இக்வான்களின் ஊடகங்களில் வருவதில்லை.
இலங்கையில் உள்ள ஸுன்னத்து வல்ஜமாஅத்து முஸ்லிம்களே ! கடாபியைக் கொலை செய்ய கட்டளையிட்டு லிபியாவை அழித்த கரழாவியை, எகிப்தை அழிக்க ஸிஸியைக் கொலை செய்ய கட்டளையிட்டுக் கொண்டிருக்கும் கரழாவியை, ஸிரியாவை அழித்து இஸ்ரேலை "மகிழ்ச்சியில் ஆழ்த்த" அஸாதைக் கொலை செய்ய ஏவிக் கொண்டிருக்கும் கரழாவியை தமது தலைவராக போற்றும் இந்த கவாரிஜ் இக்வான்களின் போலிச் செய்திகளை நம்பி அறிவையையும் ஈமானையும் இழக்காமல் எச்சரிக்கையாக இருங்கள் !
14.9.2017