Sunday, April 5, 2015

எமது புத்தக விசேசம்

நேர்வழியை அறிய இஸ்லாம் கூறிய வழி !

நீங்கள் ஏராளம் புத்தகங்கள் படித்திருப்பீர்கள்.

ஒவ்வொரு புத்தகமும் அதன் நோக்கத்தைப் பொறுத்து ஏதாவது விசேசத் தன்மைகள் உள்ளவையாக இருக்கலாம்.

ஆனால் எமது இந்த நூல் மற்ற சகல நூல்களிலும் நீங்கள் காணாத விசேச தன்மைகள் பல பொதிந்தவை என்பதை நீங்கள் கண்டுபிடித்தீர்களா ?

இதோ இந்த நூலைப் பற்றிய சில விசேசங்கள் :-

  1. மற்றப் புத்தகங்கள் பெரும்பாலும் நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள் செய்யக்கூடிய, நம்பக்கூடிய ஏதாவது ஒரு அல்லது பல விடயங்களுக்கு குர்ஆன் ஹதீஸில் இருந்து ஆதாரங்களை எடுத்துக் காட்டக்கூடியதாக இருக்கும். (உதாரணமாக மௌலிது கொடுக்க ஆதாரம், தராவீஹ் 20க்கு ஆதாரம், . . . . .இப்படித் தொடரும்) .ஆனால் எமது இந்தப் புத்தகத்தில் அப்படியாக எமது அமல்களுக்கு ஆதாரம் கூறவில்லை.

    மாறாக , வஹாபிய்யத்து என்பது இஸ்லாம் அல்ல. அது கவாரிஜு கொள்கை. அதைப் பின்பற்றியோர் மறுமையில் நஷ்டவாளர்களாகி, அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாகிறார்கள் என்பதை உறுதியான ஆதாரங்கள் மூலம் எடுத்தக் காட்டுகின்றது.
  2. எமது புத்தகத்தில் ஏதாவது ஒரேயொரு பாடத்தை எடுங்கள். பல முறை நுணுக்கமாகப் படியுங்கள். பின்னர் வஹாபி நோய் தொற்றிய நாலைந்து பேருடன் நீங்கள் ஒரு வாரம் அளவு அந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசிப் பழகுங்கள். அப்புறம் எமது ஊரவர்களான எந்த வஹாபியுடனும் அந்த ஆதாரத்தை மட்டும் நீங்கள் பேசி அந்த வஹாபியை தோற்கடிக்கக் கூடிய சக்தியை நீங்கள் பெறுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.
  3. எமது புத்தகத்தில் உள்ள சில ஆதாரங்கள் ஒரு வேளை நீங்கள் எமது பயானிலோ அல்லது வேறு மௌலவிமாரின் பயானிலோ கேட்டதாக இருக்கலாம்.

    ஆனால் அந்த ஆதாரத்தை நாம் புதிய ஒரு கோணத்தில் அணுகியுள்ள முறையும், அந்த ஆதாரத்தை வஹாபியத்தை முறியடிக்க நாம் உபயோகித்துள்ள முறையும் உங்களுக்கு முற்றும் புதியதாக, பலம் வாய்ந்ததாக இருப்பதைக் காண்பீர்கள்.

    உதாரணமாக "கல்வியைத் தேடிப் படிப்பது ஒவ்வொரு முஸ்லிமின் பேரிலும் பர்ழான கடமையாகும்" ( طلب العلم فريضة على كل مسلم ) என்ற ஹதீஸ் பாலர் வகுப்பு மாணவர்களும் போட்டிகளில் பேசக்கூடிய ஹதீஸ். ஏராளம் மௌலவிமார்கள் பேசியதை நீங்கள் நூற்றுக்கணக்கான தடவைகள் கேட்டிருப்பீர்கள்.

    ஆனால் வஹாபிகளை முறியடிக்க அந்த ஹதீஸை நாம் புதிய ஒரு கோணத்தில் உபயோகித்திருப்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
    (பொதுவாக நீங்கள் எல்லோரும் பல நூறு தடவைகள் மற்ற மௌலவிமாரின் பயான்கள் மூலம் கேட்ட ஆதாரங்களை நாம் எமது பயான்களிலும், புத்தகங்களிலும், சஞ்சிகைகளிலும் வஹாபிகளை முறியடிக்க பெரும் ஆயுதங்களாக புதிய கோணத்தில் பயன்படுத்துவதை சிந்திப்பவர்கள் அறிவர். 'வெற்றி' சஞ்சிகையின் ஆசிரியராக நான் கடமையாற்றிய போது நாம் வெளியிட்ட அத்தகைய புதிய ஆய்வுகள் அகில இலங்கை வஹாபித் தலைமையகங்களையே அதிர வைத்தன. அதனால் தான் எப்படியாவது எம்மை ஓரம் கட்டக்கூடிய மாபெரும் சதி வலையை விரித்தனர். அந்தச் சதிவலையில் பள்ளத்தக்கியா நிர்வாகம் சிக்கி நாமும் ஓரம் கட்டப்பட்டு, 'வெற்றி' சஞ்சிகையும் அழிந்து விட்டது.

    கத்தம் கொடுக்கக் கூடாது என்று எம்மை எதிர்க்க உலக வஹாபிகள் அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஹதீஸையே (மனிதன் இறந்துவிட்டால் அவன் செய்யக்கூடிய அமல்கள் . . . . . . என்ற ஹதீஸ்), மௌலிது கொடுப்பது அவசியம் என்பதற்கான பலமான ஆதாரமாக நாம் ஆய்வு செய்து எழுதியிருப்பதை Muaskarur Rahman Ladies Arabic College - Convocation Souvenir - 2012 இல் 50ம்பக்கத்தில் நீங்கள் காணலாம்).
இன்ஷா அல்லாஹ் தொடரும்.

No comments:

Post a Comment