Wednesday, December 9, 2015

பார்த்தால் ISIS தாஇஷ் . ஆனால் ...

புதிதாக  ISIS தாஇஷ்கள் எங்கே இப்படுகொலையைச் செய்தார்கள் என்று நினைக்கிறீர்களா?
இது  ISIS படுகொலை அல்ல.
 ISIS ஐ ஒழித்துக் கட்டவென ஸிரியாவில் புதிதாக தோன்றியுள்ள ஒரு அமைப்பு இது.
"ஷாம் முன்னணி"  "الجبهة الشامية" என்பது இதன் , பெயர்.
தாஇஷ்களை இவர்கள் பிடித்து, அவர்களின் பாணியிலேயே முகக்கவசம் அணிந்து, அவர்களுக்கு மரண தண்டனைக்குரிய செந்நிற உடை அணிவித்து, கைகளைக் கட்டி, மரண தண்டனை நிறைவேற்றப் போவது போல், அவர்களின் தலைக்கு நேரே துப்பாக்கியை வைத்து, ஊர்வலமாக அழைத்துச் சென்று, இறுதியில், துப்பாக்கிகளை அப்புறப்படுதிவிட்டு, ஒரு மார்க்க அறிஞர் வந்து, அந்த தாஇஷ்களுக்கு உபதேசம் செய்துவிட்டு, 
" நாம் முஸ்லிம்கள். அநியாயக் காரர்கள் அல்லர்"
"நலவு செய்தல் எமது அடிப்படை. அநியாயம் செய்ய மாட்டோம்" என்று கூறுவார்..

பின்னர் அந்த தாஇஷ்களை சிறையில் அடைத்து விடுவர். படுகொலை செய்ய மாட்டார்கள். 

தாஇஷ்களையும் அதில் சேர இருப்பவர்களையும் உள ரீதியாக பலவீனப்படுத்தி, தாஇஷை ஒழிப்பது இவர்களின் திட்டம்.


No comments:

Post a Comment