Sunday, July 12, 2015

வஹாபியத்தை மடக்காவிட்டால் !

இராக்கில் அப்பாவி முஸ்லிம்களை நாய் கொல்வது போன்று கூட்டம் கூட்டமாக கொன்று தீர்க்கிறார்கள் கவாரிஜ் வஹாபிகள். வீடியோ

அந்த வஹாபிகள் செவ்வாய்க் கிரகத்தில் இருந்து வந்தவர்களா ? இல்லை, வேறு கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்களா ? இல்லவேயில்லை.

ஸுன்னத்து வல்ஜமாஅத்து மத்ஹபு தரீக்காக்களில் இருந்தவர்கள் தான். அரபு நாட்டு அதிகமான தலைவர்களினதும், உலமாக்களினதும் கவனயீனத்தாலும், வஹாபியத்தின் பயங்கரத்தை ஹதீஸ்கள்கள் மூலம் அறியாமலும், வஹாபிய்தை மடக்க ஆரம்பத்திலேயே கடும் நடவடிக்கை எடுக்காமலும் இருந்ததால் தான் வஹாபித்தலைவர்களின் கவர்ச்சிப் பிர்சசாரங்களால் கவரப்பட்டு வஹாபியாக மாறி, இன்று மனித இனத்தையே படுகொலை செய்யும் பயங்கரவாதிகளாக மாறியுள்ளனர்.

வஹாபியத்தை இப்போதே மடக்காவிட்டால் இதே நிலைதான் இலங்கையிலும் எதிர்காலத்தில் நடக்கும். வஹாபிய்தைப் பற்றி 30 - 40 வருடங்கள் ஆராய்ச்சி செய்து, வஹாபியத்தை விவாதம் மூலமும் பலவிதமான செயற்திட்டங்கள் மூலமும் மடக்கி இந்நாட்டில் ஸுன்னத்து வல்ஜமாஅத்தின் கையோங்கச் செய்ய வந்தவர்களை பதவியாசை பொறாமை காரணமாக சதிகாரர்கள் ஓரம் கட்டியதாலும், அந்த சதிகாரர்களை சுயநலமிகள் ஆதரிப்பதாலும் இலங்கையிலும் நாளுக்கு நாள் வஹாபியத்து வேகமாக வளர்கின்றதை எவராலும் மறுக்க முடியாது.

இப்படியாக வளறும் வஹாபிகள் அவர்களின் அரபு நாட்டு எஜமானர்களின் கட்டளை வரும் போது பயங்கரவாதிகளாக (அவர்களின் பார்வையில் முஜாஹிதீன்களாக) மாறி, இலங்கை முஸ்லிம்களை கொன்று குவிக்கும் காலம் ஒன்று வந்தால், இன்று தரீக்கா என்ற பெயரில் இருந்துகொண்டு வஹாபியத்து வளர மறைமுகமாக காரணமாக இருப்பவர்களே அதற்கு பொறுப்பு. வஹாபியத்தை மடக்கும் ஆற்றல் உள்ளவர்களுக்கு ஆதரவு தராமல், அவர்களை எதிர்க்கும் (பள்ளத்தக்கியா) சதிகார்களை ஆதரிப்பவர்களும், வஹாபியத்தை மடக்கும் கலை தெரியாமல் வெறும் கவர்ச்சியாக பயான் பண்ணி தமது பொக்கட்டை நிரப்பிக்கொண்டு போகும் சில மௌலவிமாரை ஆதரிப்பவர்களுமே இலங்கையில் அப்படியொரு பயங்கர யுகம் ஏற்படுவதற்கு பொறுப்பு.

வஹாபியத்தை பூண்டோடு அழிக்கும்படி பல ஹதீஸ்கள் கட்டளையிட்டுக்கொண்டிருக்கும் போது, எமக்கு தக்கியாவில் அதிகாரம் இருந்த மூன்று வருடங்களிலும் ( 1996, 97, 98 ) நாம் மிகச்சிறப்பான முறையில் வஹாபியத்தை மடக்கி காட்டியிருக்கும் போது, சதிகார்களுக்கு வெற்றி கொடுத்து எமது பதவி பறிக்கப்பட்ட பின்னர்தான் கஹடோவிடாவிலும் மற்ற இடங்களிலும் வஹாபியத்து வேகமாக பரவி வரவதை அனைவரும் அறிவர். حسبنا الله ونعم الوكيل

No comments:

Post a Comment