Thursday, November 26, 2015

தாஇஷ் - ஐரோப்பிய ஊடல் நாடகம்

தாஇஷை அழிக்க உண்மையில் விரும்புவது ஈரான், லெபனான் ஹிஸ்புல்லாஹ், ஸிரியா, இராக், குர்திஷ் மட்டும் தான். மற்ற நாடுகள் எல்லாம் சுய நலம். பிரான்ஸில் தாக்கியவுடன் பிரான்ஸ் உடனடியாக தாஇசை தாக்கியது எல்லாம் அந்நாட்டு மக்களையும் உலகத்தையும் ஏமாற்றும் கண் துடைப்பு நாடகம். கலங்கிய குட்டையில் மீன்பிடிப்பது போன்று, ஐரோப்பா தம்மைப் பாதுகாக்காது என்று கலங்கிக் கொண்டிருக்கின்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவி செய்து, தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட ரஷ்யா முன்வருகின்றது.

அல்கைதா, இக்வானுல் முஸ்லிமீன், தாஇஷ் மூலம் அரபு நாடுகளை குட்டிச் சுவராக்கி, தாஇஷை காட்டி அரபு நாடுகளுக்கு ஆயுதம் விற்பதும், இஸ்ரேலை பாதுகாப்பதும், அரபு பெற்றோலை தாஇஷ் மூலமும் துருக்கி மூலமும் பெறுவதுமே அமெரிக்க பிரிட்டன், பிரான்ஸ் திட்டம்.

இத்திட்டத்தை நோக்கிய பயணத்தில் ஐரோப்பாவில் 1000 பேர் அழிவது ஒன்றும் ஐரோப்பியத் தலைவர்களுக்கு பெரிய இழப்பல்ல. முஸ்லிம் நாடுகளில் முதலாவது அணுகுண்டை கண்டுபிடித்த பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியாஉல் ஹக்கை படுகொலை செய்வதற்கு, அவர் சந்தேகிக்காமல் இருப்பதற்காக அவர் போகும் விமானத்தில் அமெரிக்கா தனது நாட்டு அதிகாரிகள் சிலரையும் தந்திரமாக அனுப்பி, விமானத்தில் குண்டு வெடித்து அவர் கொல்லப்பட்டது இதற்கு இன்னொரு உதாரணம்.

ஒரு கேள்வி :
தமக்கு உதவும் ஐரோப்பாவில் தாஇஷ் ஏன் தாக்க வேண்டும்?

அரபு நாடுகளில் அரசாங்கங்களை வீழ்த்தி ஆதிக்கத்தைப் பிடிப்பது தாஇஷ் தலைவர்களின் தேவை.

அத்தேவைக்கு ஐரோப்பிய நாடுகள் உதவுவது (தாஇஷ் மூடர்களுக்கல்ல) , மாறாக தாஇஷ் தலைவர்களுக்குத் தான்.

தாஇஷ் தலைவர்களுக்கும் ஐரோப்பியத் தலைவர்களுக்கும் இடையில் தான் மறைமுகமான ஒப்பந்தம்.

இது தாஇஷ் மூடர்களுக்கு தெரியாது.

தலைவர்கள் கூறும் "குர்ஆன் ஹதீஸ், தவ்ஹீத், ஜிஹாத்" என்ற வார்த்தைகள் மட்டும் தான் அந்த மூடர்களை இயக்குகின்றது.

ஐரோப்பாவை தாக்காவிட்டால், "குர்ஆன் ஹதீஸ், ஜிஹாத்" என்று "வெறியேற்றப்பட்ட" மூடர்கள் தமது தலைவர்களை சந்தேகிப்பார்கள். ஐரோப்பா தான் தாஇஷை வளர்ப்பதாக ஊடகங்கள் கூறுவதைக் கேட்டு, மூடர்கள் தமது தலைவர்களை விட்டும் பிரிந்து , புது இயக்கம் அமைக்கக் கூடும்.

இந்தப் பயத்தினால், ஐரோப்பாவில் சில தாக்குதல் நடாத்தி, தமது தலைவர்கள் உண்மையான ஜிஹாத் தான் செய்வது என்று மூட தாஇஷ்களை தலைவர்கள் நம்ப வைக்கிறார்கள்.

இந்த மாயாஜாலங்கள் எல்லாம் அரசியலில் சகஜம் என்பது ஐரோப்பியத் தலைவர்களுக்கும் தெரியும்.

எனவே தான் தாஇஷை முற்றாக அழிக்க ஐரோப்பிய நாடுகள் விரும்புவதில்லை.

ஆனால் மேலே கூறிய தமது தேவைகள் நிறைவேறினாலோ, அல்லது அத்தேவைகளை நிறைவேற்ற வேறு ஆள், அல்லது நாடுகள் கிடைத்தாலோ , ஐரோப்பியத் தலைவர்கள் தாமே வளர்த்த தாஇஷை முற்றாக அழிக்கவும் தயங்க மாட்டார்கள். 

இதே பாணியில் தான் தாமே வளர்த்த ஸதாமையும், பின்லாடனையும் அழித்தார்கள்.

துருக்கிக்கு தாஇஷிடமிருந்து பெற்றோல் அனுப்பிய சில வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதை கீழே உள்ள செய்தி சொல்கிறது.

No comments:

Post a Comment