Sunday, December 14, 2014

இக்வானுல் முஸ்லிமீனை வளர்த்த கட்டார் அதனை அழிக்கும் பாதையில் வீறு நடை !

இக்வானுல் முஸ்லிமூன் என்ற பயங்கரவாத, கவாரிஜ், வஹாபி இயக்கத்தின் உயிர் நாடியாக இதுவரை காலமும் விளங்கியது கட்டார் என்பது உங்களுக்குத் தெரியும். இன்று ஆப்கானிஸ்தான், லிபியா, ஸிரியா, இராக் ஆகிய நாடுகள் உள்நாட்டுப் போரால் குட்டிச் சுவராகிக் கொண்டிருப்பது போன்று, அலி றழியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தில் கவாரிஜ்களின் கோசமாக இருந்த "குர்ஆன் ஹதீஸ்" என்ற முகமூடி அணிந்து இஸ்லாமிய உலகின் முதுகெலும்பாக உள்ள எகிப்தை அழிப்பதற்கும், அதன் மூலம், இஸ்ரேலை மத்திய கிழக்கின் "ராஜா" வாக்குவதற்கும், எகிப்தில் உள்நாட்டுப் போரை ஆரம்பித்த கவாரிஜ் இக்வான் முர்ஸிக்கு கோடானு கோடி பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்து, இக்வானுல் முஸ்லிமீனுக்கு ஆதரவாக 'அல் ஜஸீரா" என்ற (பொய்ப் பொட்டியான) பத்திரிகை, இணையத்தளத்தையும் தனது நாட்டிலிருந்தே உலகளாவிய ரீதியில் நடாத்திக் கொண்டிருந்தது கட்டார் என்பதும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

புதிய விசயம் என்ன தெரியுமா? பாத்தில் கீழே போய் ஹக்கு மேலே வந்து விட்டது. தனது நாடு இனிமேல் எகிப்துக்கும், அதன் தலைவர் ஸீஸிக்கும் பூரண ஆதரவை வழங்குவதாக கட்டாரில் நடந்த அரபு நாடுகளின் மாநாட்டில், கட்டார் மன்னர் அறிவித்துள்ளார். அரபு நாடுகள் எல்லாம் அரபுலகின் நிகரற்ற தலைவர், அமெரிக்காவையும் மேற்குலகையும் அடிபணிய வைத்த தலைவர் ஸிஸிக்கு ஆதரவளிக்கும் போது, தான் மட்டும் தனித்திருந்தால் தனது முகவரியே இல்லாமல் போகும் என்பதை இப்போது கட்டார் மன்னர் புரிந்து கொண்டுள்ளார்.

இதோ அது சம்பந்தமான ஆங்கில, அரபு பத்திரிகைச் செய்திகள் :-





No comments:

Post a Comment