Wednesday, September 27, 2017

Interpole இல் பலஸ்தீன்

பலஸ்தீன் : ஒரு நல்ல செய்தி !
பலஸ்தீன் நாட்டுக்கு இண்டர் போல் ( Interpole ) அமைப்பில் இன்று முதல் அங்கத்துவம் கிடைத்துள்ளது. சர்வதேச பொலிஸ் அமைப்பு  International Police Organization இண்டர் போல் என்று சுருக்கமாக இழைக்கப் படுகிறது. இன்று புதன் கிழமை சீனாவின் தலைநகரான பீக்கிங் இல் நடைபெற்ற அதன் கூட்டத்தில் பலஸ்னை அந்த அமைப்பில் சேர்த்துதுக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. 133 நாடுகள் அங்கம் வகிக்கும் Interpole  அமைப்பில் 75 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 24 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 34 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
                பலஸ்தீன் அதில் இணைவதை இஸ்ரேல் ஆரம்பத்திலிருந்தே கடுமையாக எதிர்த்து வந்தது. அதில் சேருவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்கும்படி அமெரிக்கா பலஸ்தீன் தலைவரை கடுமையாக வற்புறுத்தியது. ஆனால்  அமெரிக்க பயமுறுத்தலை பலஸ்தீன் மதிக்கவில்லை.
                Interpole இல் பலஸ்தீன் ஒரு அங்கத்துவ நாடாக இணைவதால், பலஸ்தீன் உரிமை இன்னும் சர்வதேச மட்டத்தில் உறுதிப்படுத்தப் படுவது மட்டுமல்ல, பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலின் எந்த அதிகாரியாவது பயங்கரவாதம் முதலிய நடவடிக்கைகளில்  ஈடுபட்டால், அவரை உலகில் எங்கிருந்தாலும் உலக நாடுகளின் பொலிஸ் துணையுடன் கைது செய்யும் உரிமை பலஸ்தீனுக்கு கிடைக்கிறது. இதனால் தான் பலஸ்தீன் அதில் சேருவதை இஸ்ரேல் கடுமையாக எதிர்த்து வந்தது.
                ஆனால் இஸ்ரேல், அமெரிக்கா, சில ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி சீனாவில் இன்று நடந்த அதன் கூட்டத்தில் பலஸ்தீனுக்கு இண்டர்போல் உறுப்புரிமை கிடைத்துள்ளது. அல்ஹம்து லில்லாஹ்.
இது சம்பந்தப்பட்ட சர்வதேச பத்திரிகையான ரஷ்யா டுடே பத்திரிகையின் செய்தி :
27.9.2017

No comments:

Post a Comment