Sunday, August 21, 2016

விவாதம் நடக்குமா ?

    விவாதத்துக்கு அழைத்த முஜாஹித் மௌலவி ஓடி ஒழிப்பது ஏன் ?
அஸ்ஸலாமு அலைக்கும்
ஜனாப் M.N.M.ஜவ்ஸி அவர்கள்
கஹட்டோவிட்ட.
சில வருடங்களுக்கு முன்னர், ஜனாப் முஜாஹித் மௌலவி அவர்கள் , கஹட்டோவிட்ட.  "ஜாமிஉத் தவ்ஹீதில்"  ஜனாப் A.H.அப்துல் பாரி ஆலிம் அவர்களை விவாதத்துக்கு பகிரங்கமாக அழைத்திருந்தமை யாவரும் அறிந்ததே. எந்த நிபந்தனையும் அவர் கூறுவதில்லை என்றும், விவாத இடத்தையும், காலத்தையும் மட்டும் அறிவித்தால் போதும் என்றும் அவர் அப்போது குறிப்பிட்டார்.
                எமக்கு சமூகப் பிரச்சினைகள் பல தடையாக இருந்ததால் நாம் அப்போது அவரின் விவாத சவாலை ஏற்க முன்வர வில்லை. இப்போது அதற்குரிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம்.
இதனடிப்படையில் , 29.7.2016 முதல், கடந்த சில தினங்களாக ஜனாப் முஜாஹித் மௌலவி அவர்களுடன் பேசுவதற்கு ஜனாப்களான G.A.M. ஸல்மான், அல் ஹாஜ் M.A.M.அர்சத் ஆகியோர், பல முறை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றும்  தொடர்பு கிடைக்காததாலும், அல்ஹாஜ் மௌலவி M.N.M.பர்தி அவர்கள் தொடர்பு கொண்ட போது, பின்னர் பேசுவதாக கூறிய அவர், இது வரை தொடர்பு கொள்ளாததாலும்,
                இன்னும் இரண்டு மூன்று வாரத்திற்குள் அந்த விவாதத்தை நடாத்துவதற்கு ஏற்ற விதத்தில், இடம், காலம் என்பவற்றை நிர்ணயிப்பதற்காக , இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தாங்களுடன் நாம் பேசுவதற்கு , ஒரு தினத்தை எமக்கு அறிவிக்கும்படி பணிவுடன் வேண்டுகின்றோம்.
ஸுன்னத்து வல் ஜமாஅத்து வாலிபர் ஒன்றியம்
126/2 Al Madhrasathul Musthafaviyyah
Kahatowita
திகதி 8.8.2016

விவாத ஏற்பாடு !
2008 இல் அப்துல் பாரி ஆலிம் அவர்களை விவாதத்துக்கு அழைத்த மௌலவி முஜாஹித் அவர்கள், விவாத ஒப்பந்தத்தின் போது, பின்வாங்கியதால் அப்போது விவாதம் நடைபெற வில்லை.
சில வருடங்களுக்கு முன்னர், மீண்டும் அப்துல் பாரி ஆலிம் அவர்களுக்கு "இக்கட்டான சூழ்நிலையில்" விவாதத்துக்கு அழைத்திருந்தார் மௌலவி முஜாஹித் அவர்கள். ஆனால் எமக்கு இப்போது விவாதத்தை நடாத்துவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
மௌலவி முஜாஹித் அவர்களும் தற்போது இலங்கையில் இருப்பதால், கடந்த 5.8.2016 முதல் அப்துல் பாரி ஆலிம் அவர்கள் சார்பாக மூவர், முஜாஹித் மௌலவி அவர்களுடன் விவாத ஏற்பாடு பற்றிப் பேச தொலைபேசி மூலமும் , SMS மூலமும் கொண்ட தொடர்புகள் பலனளிக்காமையினால், 9.8.2016 இல் முஜாஹித் மௌலவியின் ஆதரவாளர்  ஒருவரிடம் , விவாதத்தை அவசரமாக நடாத்துமாறு கோரி, மேலே உள்ள கடிதம்  கையளிக்கப்பட்டது.
எனவே இன்னும் ஓரிரு வாரத்திற்குள் இந்த விவாதத்தை நடாத்துவதற்கு மௌலவி அவர்கள் முன்வருவார் என்று நாம் எதிர்பார்க்கிறோம்.
தொடர்புகளுக்கு:
அல் ஹாஜ் M.A.M.அர்சத் : 0773331978
ஜனாப் G.A.M.ஸல்மான் : 0777566636
                                                                                இப்படிக்கு
ஸுன்னத்து வல்ஜமாஅத்து வாலிபர் ஒன்றியம்
126/2 Almadhrasathul Musthafaviyyah
Kahatowita.
18.8.2016


No comments:

Post a Comment