Friday, June 26, 2015

குவைத் மஸ்ஜிதில் வஹாபி குண்டுத் தாக்குதல்

இன்று 26.6.2015 குவைத்தில் வஹாபிகளின் தற்கொலை குண்டுத்தாக்குதல்

இடம் - அல்லாஹ்வின் மஸ்ஜித் - மஸ்ஜித் இமாம் ஸாதிக்
பலி     - 27 அப்பாவி முஸ்லிம்கள்
காயம்  - 200 அப்பாவி முஸ்லிம்களுக்கும் அதிகம்.
மாதம் - புனித ரமழான் மாதம்
பலியானோர் - நோன்பாளிகள்
பலியானோர் - ஜும்ஆ தொழ வந்தவர்கள்
பலியானோரில் - சிறுவர்களும் வயதாளிகளும் அடங்குவர்
தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பேற்றது -  தாஇஷ்  IS வஹாபிகள்

வஹாபியத்து என்றால் என்ன? வஹாபி இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி எத்தகையது?

  • முதலில் அவ்லியாக்கள் இமாம்கள் உண்மையான தரமான உலமாக்களை விட்டும் தூரவாதல்
  • அடுத்து  '' அல்லாஹ்விடம் மட்டுமே கேட்க வேண்டும் நபியிடமும் அவ்லியாக்களிடமும் கேட்பது சிர்க்கு '' என்ற Brain wash
  • அடுத்து  '' எல்லா பித்அத்தும் வழிகேடு '' என்ற ஆராய்ச்சி இல்லாத Brain wash
  • அடுத்து  உண்மை இஸ்லாத்தைப் பேசும் உலமாக்களைத் தாக்க வெறியூட்டல் - ஈமான் என்ற பெயரில் 
  • அடுத்து  '' நபிமாரினதும் அவ்லியாக்களினதும் - சுவர்க்கப் பூங்காவான - கப்ருகளை இடித்து நொறுக்க தலைவரின் கட்டளையை கண்மூடித்தனமாகப் பின்பற்றி நிறைவேற்ற சிந்தனா சக்தியை இழந்த ஒரு பட்டாளம்.
  • அடுத்து  வஹாபியல்லாத சகல முஸ்லிம்களையும் மிகப்பயங்கரமான முறைகளில் படுகொலை செய்தல்.
  • அடுத்து தலைவன் கட்டளையை அல்லாஹ்வின் கட்டளை என நினைத்து தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு நரகம் போகத்தயாரான ஒரு வெறிக்கூட்டம்.
  • அடுத்து முஸ்லிம் நாடுகளில் இந்த தற்கொலை வெறியாட்டம் கார்குண்டுகள் கனரக ஆயுதங்கள் மூலம் இரத்தக்களறியை ஏற்படுத்தி நாடுகளைக் கைப்பற்றும் உச்சக்கட்ட பயங்கரவாதம்
''ரஸூலுல்லாஹ்விடமும் அவ்லியாக்களிடமும் உதவி - வஸீலா தேடுவது சிர்க்கு. சிர்க்கு வைப்போர் அனைவரையும் கொலை செய்ய வேண்டும்'' என்பதே வஹாபி இயக்கங்கள் அனைத்தினதும் அடித்தளம்  Foundation.

தரீக்காவாதிகள் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்களின் ஏமாளித் தனத்தாலேயே முழு உலகிலும் வஹாபியத்து பரவியது.

வஹாபி அட்டூழியங்கள் இத்துடன் நிற்காது. சகல நாடுகளிலும் பரவும் என்பதை காலம் நிரூபிக்கலாம்.

No comments:

Post a Comment