Wednesday, June 24, 2015

தாஇஷின் கொடுமை

இது தரீக்கா இஸ்லாமா வஹாபி இஸ்லாமா ?

மேலே உள்ளது ''சிர்க்கை ஒழித்தல் '' என்ற பெயரில் ஸிரியாவில் உள்ள மதத்தலம் ஒன்றை தாஇஷ் IS வஹாபிகள் குண்டு வைத்து தகர்க்கும் படம். இது ரஷ்யா டுடே என்ற இணையப் பத்திரிகையில் வெளியானது


கீழே உள்ள வீடியோவில் :
  • நான்கு பேரை காரில் ஏற்றி அடைத்து . ரொக்கட் தாக்குதல் மூலம் காரைக் கொழுத்தி அந்நான்கு பேரும் கருகிச் சாவதை ரஷித்து மகிழ்கிறார்கள் தாஇஷ் IS வஹாபிகள் .
  • ஐந்து பேரை இரும்புக் கூட்டில் அடைத்து குளத்துக்குள் இறக்கி அவர்கள் மூச்சுத் திணறி இறப்பதை ரசித்து மகிழ்கிறார்கள் தாஇஷ் ISIS வஹாபிகள் .
  • ஏழு பேரின் கழுத்துகளை வெடிபொருள்களால் செய்யப்பட்ட வயரால் பிணைத்து அதற்கு தீ வைத்து அந்த ஏழு பேரின் கழுத்துகளும் வெடித்துச் சிதருவதை பார்த்து ரசிக்கார்கள் தாஇஷ் IS வஹாபிகள்
இந்த மாபெரும் கொடுமைகளை இராக் மக்களுக்கெதிராக தாஇஷ் வஹாபிகள் செய்கிறார்கள். ''கனாத்துல் ஆலம்'' என்ற ஈரான் இணையத்தளத்தில் இது வெளியிடப்பட்டுள்ளது.


இங்கே மூன்று விடயங்களைக் கூறுவது அவசியம்

  1. இந்த மனிதப்பலிகளான அநியாயங்கள் மத்ஹபுகளையும் தரீக்காக்களையும் பின்பற்றும் முஸ்லிம்கள் உண்மை முஸ்லிம்கள் செய்ய வில்லை.
    வழிகெட்ட சீஆக்கள் காதியானிகள் செய்ய வில்லை.
    ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சைத்தானின் கொம்பு நஜ்தில் உருவாவதாக எச்சரித்த வஹாபி இயக்கங்களில் ஆரம்பத்தில் தவ்ஹீது பேசியவர்கள் தான் படிப்படியாக தமது பகுத்தறிவை தமது தலைவர்களின் விளக்கங்களுக்கு அடகு வைத்து இப்போது தலைவர் ஏவும் அத்தனை கொடுமைகளையும் ''குர்ஆன் ஸுன்னா '' என்ற பெயரில் செய்கிறார்கள்.
  2. உலகில் எல்லா நாடுகளிலும் உள்ள வஹாபி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்றோ ஒரு நாள் தமது தலைவரின் கட்டளைக்கு அடிபணிந்து இப்படியான கொடுமைகளை செய்யத்தான் போகிறார்கள். முஸ்லிம்களை அநியாயமாக கொன்று அல் குர்ஆனின் எச்சரிக்கைப்படி மறுமையில் நிரந்தர நரகத்துக்குப் போகக் கூடியவராக தன்னை ஆளாக்கிக் கொள்ளாமல் உடனடியாக 1400 வருடங்களாக தொடராக உள்ள இஸ்லாத்துக்கு மீண்டும் வந்து ஈமானைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
  3. வஹாபி இயக்கங்களின் வேகமான வளர்ச்சியை முப்பது 30 வருடங்களுக்கு முன்னரே குவைத்தில் படிக்கும் போதே தூரதிருஷ்டியுள்ள பேரறிஞர்கள் மூலம் நாம் அறிந்து வஹாபியத்தை ஊரிலும் இலங்கையிலும் உலகிலும் கட்டுப்படுத்துவதற்கான மாபெரும் திட்டங்களுடன் நாம் வந்து எமக்கு பதவி அதிகாரம் இருந்த மூன்று வருடங்களிலும் 1996 - 97 - 98 முழு இலங்கை மட்டத்தில் வஹாபியத்தை மடக்கினோம்.

    ஆனால் பொறாமையே உருவான பள்ளத்தக்கியா நாசகார சதிகாரர்கள் ''ராஜசதி'' செய்து எமது பதவியைப் பறித்தனர். எமது மத்ரஸாவைப் பறித்தனர். அதன் விளைவாக இந்த 15 வருடங்களிலும் இலங்கையில் இலட்சக்கணக்கானவர்கள் உண்மை இஸ்லாத்தை விட்டுவிட்டு வஹாபி இயக்கங்களில் தீவிரமாக சேர்ந்து வருகிறார்கள்.

    எனவே வஹாபி வளர்ச்சிக்கும் அது முற்றி என்றோ ஒரு நாள் தாஇஷ் IS பயங்கரவாதத்துக்கும் பள்ளத் தக்கியா நாசகார சதிகாரர்களே பொறுப்பு. மறுமையில் அவர்கள் அதன் பலனைக் கண்டுகொள்வார்கள்.

No comments:

Post a Comment