Saturday, March 21, 2015

மஸ்ஜிதில் தற்கொலை குண்டு

இன்று வெள்ளிக்கிழமை 20.3.2015 யெமன் தலை நகர் ஸன்ஆவில் இரண்டு சீஆ மஸ்ஜுதுகளில் வஹாபி பயங்கரவாத வம்பர்கள் தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். ஜாமிஆ பத்ர் என்ற மஸ்ஜிதில் ஜும்ஆ நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஒரு வஹாபி தற்கொலைதாரி பள்ளியில் குண்டை வெடிக்கவைத்து ஏராளம் பேரைப் படுகொலை செய்த மறுகணம், இன்னொரு வஹாபி தற்கொலைதாரி மக்களின் பதட்டத்தைப் பயன்படுத்தி மிஹ்ராப் வரை விரைந்து அவிடத்தில் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து 137 பேருக்கும் அதிகமானோரைப் படுகொலை செய்து, மேலும் 350 பேருக்கும் அதிகமானோரை படுகாயங்களுக்கு உள்ளாக்கியுள்ளனர்.

இன்னொரு பள்ளியில் தற்கொலை தாரி வஹாபியை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கிப் பிடிக்கவே, அந்த வஹாபி குண்டை வெடிக்க வைத்து அவன் மட்டும் அழிந்துள்ளான்.

"சீஆக்கள் காபிர்கள், எனவே அவர்களைக் கொலை செய்து அழித் தொழிக்க வேண்டும்" என்று நஜ்து வஹாபி தலைவர்கள் போதித்ததை கண்மூடித்தனமாக பின்பற்றியே இவ்வாறு உலகை கொலைக்களமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் சிந்தனா சக்தியை இழந்த வஹாபிகள்.

கைரான மூன்று நூற்றாண்டுகள் என்று ரஸூலுல்லாஹ்வால் புகழப்பட்ட ஸஹாபாக்கள், தாபிஊன்கள், தபஉத் தாபிஈன்கள் காலத்தில் அவர்களுக்கு தெரியாத புதிய இஸ்லாத்தை இப்போது கடைசி கால வஹாபிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யார் என்ன சொன்னாலும், வஹாபித் தலைவர்களை கண்மூடிப் பின்பற்றும் வஹாபி இளைஞர்கள் கேட்கப் போவதில்லை.

தமது கலீபாவுக்கு பைஅத்துச் செய்வது அவசியம் என்ற போர்வையில் தாஇஷ் (ISIS) தலைவருக்கு உலகில் உள்ள சகல வஹாபிகளையும் கட்டுப்பட வைத்து. முழு உலகையும் கொலைக்களமாக மாற்றும் திட்டம் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

சீஆக்களை மட்டுமல்ல, ஸுன்னத்துவல் ஜமாஅத்தையும் இந்த வஹாபிகள், அழிப்பதை நீங்கள் நாளாந்தம் கேள்விப்படுகிறீர்கள். இலங்கையிலும் இந்நிலை வரலாம்.

வஹாபியத்தை மடக்கி தரீக்காக்களை உயிர்ப்பிக்க வந்து, அதனை வெற்றிகரமாக சாதித்துக் கொண்டிருந்தவர்களை சதி மூலம் ஓரம்கட்டி, 15 வருடங்களாக இலங்கையில் சகல ஊர்களிலும் மிக வேகமாக வஹாபியத்து வளர உதவி செய்துகொண்டிருக்கும் அநியாயக் காரர்களே இதற்குப் பொறுப்பு !

அல்லாஹ் தான் முஸ்லிம் உம்மத்தைப் பாதுகாக்க வேண்டும்.

No comments:

Post a Comment