Tuesday, August 1, 2017

அல் அக்ஸா ஆபத்தில் !

கடந்த ஒரு சில தினங்களுக்கு முன் 27.7.2017 அன்று மகிழ்ச்சியான செய்தியை பலஸ்தீனிலிருந்து படித்தோம். ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் அஸ்ர் தொழுகைக்காக அணியணியாகச் சென்றதே அந்தச் செய்தி.
இன்று அதற்கு நேரெதிரான கவலைமிக்க பயங்கரமான செய்தி கிடைத்துள்ளது. இன்று 1.8.2017 அதிகாலை முதல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து சகல முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டு, இஸ்ரேல் இராணுவத்தின் துணையுடன் பலநூற்றுக் கணக்கான யூதர்கள் மஸ்ஜிதுல் அக்ஸாவை முற்றாக கைப்பற்றியுள்ளனர். யூதர்களின் வணக்கங்களையும் அதனுள் புரிந்துள்ளனர்.
(வீடியோ)
என்ன நடக்கப் போகின்றதோ அல்லாஹு அஃலம்.
ட்ரம்ப் திரைமறைவில் யூத ஆக்கிரமிப்புக்கு பூரண ஆதரவு.
பலஸ்தீன் – யூத "மார்க்க யுத்தமொன்று" வெடிக்குமா?
அகமான அரபு அரசியல் தலைவர்கள் வேறு விடயங்களைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஓரிரு அரபுத் தலைவர்கள் வாயளவில் "கடும் கண்டனம்" தெரிவித்துள்ளனர்.
இந்தப் பதட்ட நிலை தொடருமா தற்காலிகமாக நீங்குமா என்பது தெரியாது. எனினும், அல் அக்ஸாவில் யஹூதிகளின் ஆதிக்கம் மேலோங்குவதும், மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அங்கு வரும் போது அவர்களை யஹூதிகள் மஸ்ஜிதுல் அக்ஸாவினுள் பல நாட்கள் முற்றுகையிடுவதும், அப்போது தஜ்ஜால் வருவதும், யூதர்கள் தஜ்ஜாலின் தலைமையில் போராடுவதும், கவாரிஜ்கள் (இப்போது பயங்கரவாத வஹாபிகளாக இருப்பவர்கள்) தஜ்ஜாலுடன் இணைந்து பலஸ்தீன் முஸ்லிம்களை எதிர்ப்பதும், அப்போது ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்தில் இருந்து இறங்கி வந்து தஜ்ஜாலை கொலை செய்வதும், அத்துடன் சகல யூதர்களையும் முஸ்லிம்கள் கொலை செய்வதும், பெரும் கற்களுக்கும் மரங்களுக்கும் யூதர்கள் மறைந்துகொள்ளும் போது, "எனக்குப் பின்னால் யூதன் இருக்கின்றான் அவனைக் கொலை செய்யவும்" என்று அந்த கற்களும் மரங்களும் முஸ்லிம்களைப் பார்த்து பேசும் என்பதும், கர்கத்  غرقد என்ற மரம் மட்டும் யூதர்களுக்கு பாதுகாப்பளிக்கும் (அதனால் முஸ்லிம்கள் அம்மரங்களில் ஒளித்திருக்கும் யூதர்களை கொலை செய்ய இலகுவாக இருக்கும்) என்ற எதிர்காலத் தகவல்கள் அனைத்தும் ஹதீஸ்களில் ஏற்கனவே கூறப்பட்டுத்தான் இருக்கின்றன.
1.8.2017

No comments:

Post a Comment