Wednesday, September 28, 2016

நபியவர்களின் ஹிஜ்ரத்தும் நஜ்து சைத்தானும்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்
ஹிஜ்ரத்துக்கு உடன் காரணமான நஜ்து சைத்தான்.
ஸவூதியில் , ரியாதில் உள்ள நஜ்தில்தான் சைத்தானின் கொம்பு உதயமாகும் என்பதை நிரூபிக்கும் குர்ஆன் தப்ஸீர் ஆதாரங்கள்.
சைத்தானின் கொம்பு உதயமாவது நஜ்தில்தான் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறிய பிரபலமான ஹதீஸ் பற்றி அனைவரும் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
"இராக்கில்தான் நஜ்து" என்று அந்த ஹதீஸை திசை திருப்பி உலக முஸ்லிம்களை மடயர்களாக்கி, சைத்தானின் கொம்பாக உதித்த இப்னு அப்துல் வஹாபை பாதுகாக்க வஹாபி இயக்கங்கள் படாதபாடு படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் இஸ்லாமிய புத்தாண்டு முஹர்ரம் பிறக்கும் போதும், நாம் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினர்கள், "அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை தமது கட்டிலில் உறங்க வைத்துவிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹிஜ்ரத்து போனது பற்றியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மண்பிடியை காபிர்களின் தலையில் எறிந்தது பற்றியும், "தவ்ர்" குகையில் நடந்த அற்புதங்கள் பற்றியும், மதீனாவாசிகள் "தலஅல் பத்ரு" கவி படித்து ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை வரவேற்றது பற்றியும் மட்டுமே பேசிப் பழகியுள்ளோம்.
சீஆக்களோ, கர்பலா யுத்தத்தை அவர்களுடைய வழிகேடுகளுக்கு ஆதரவாக பயன்படுத்தி, நெஞ்சில் கத்தியால் குத்தி (மாரடித்து)க்கொண்டு, பல ஸஹாபாக்களையும் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினரையும் வசைபாடும் விழாவாக முஹர்ரத்தை மாற்றியமைத்து வழிகேட்டை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. போன்ற இக்வானுல் முஸ்லிமீன் பயங்கரவாத அமைப்பின் கிளைகள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஆத்ம சக்தி வாழ்க்கைய மூடிமறைத்து , "மதீனாவில் இஸ்லாமிய அரசாங்கத்தின் ஆரம்பம் தான் ஹிஜ்ரத்து கற்றுத் தரும் பாடம்" என்ற விதத்தில், பயான்களையும் , ஸெமினார்களையும் நடாத்தி, ஒவ்வொரு வருடமும் வரும் முஹர்ரத்தை "முஸ்லிம்களை வழிகெடுத்தி தமது இயக்கத்தில் சேர்க்கவும் முஸ்லிம் நாடுகளை அழிக்கவும்" ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். "மக்கள் புரட்சி" என்ற பெயரில் முஸ்லிம் நாடுகளில் உள்நாட்டுக் குழப்பத்தை உண்டுபண்ணி, வலுவான அரசாங்கங்களை வீழ்த்தி, அந்நாடுகளை குட்டிச் சுவராக்கி அழித்து, இஸ்ரேலை மத்திய கிழக்கில் "ஒரே வல்லரசாக" ஆக்குவதற்கு அடித்தளமாக முஹர்ரத்தை மாற்றியமைத்து விட்டார்கள்.
தவ்ஹீது ஜமாஅத்தைப் பொறுத்தளவில், "முஹர்ரத்தின் சிறப்புக்களை பேசுவது , "நரகத்துக்கு இட்டுச் செல்லும் வழிகெட்ட பித்அத்து". எனவே அவர்கள் இது பற்றி அலட்டிக் கொள்வதில்லை. ஏதோ பெயருக்கு ஒரு பயானில் சில வரிகள் கூறலாம். அவ்வளவுதான்.
ஆனால் இஸ்லாமிய ஹிஜ்ரி ஆண்டின் பிரதான கருப் பொருளான, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா முகர்ரமாவிலிருந்து மதீனா முனவ்வராவுக்கு ஹிஜ்ரத்து செய்ய உடனடிக் காரணமாக அமைந்த பிரதான சம்பவத்தைப் பற்றிப் பேச நாம் மறந்து விட்டோம்.
இந்த உடனடிக் காரணம் இரண்டு வகையில் முக்கியத்துவம் பெறுகின்றது.
ஒன்று : கண்மணி நாயகம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட மாபெரும் கொலைச் சதித்திட்டமும், அதை முறியடித்து அல்லாஹு தஆலா அவர்களைக் காப்பாற்றியதும்.
இரண்டாவது : கடைசி காலத்தில் நஜ்திலிருந்து சைத்தானின் கொம்பு (அதாவது, பட்டாளம்) வெளிப்படும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்தார்களோ, எந்த (ஸவூதி) நஜ்திலிருந்து அந்த சைத்தானின் "வஹாபி, கவாரிஜ், தக்fபீரி" பட்டாளம் வெளியாகி, தவ்ஹீது, ஸலபி, ஜமாஅதுல் முஸ்லிமீன், ஜமாஅதே இஸ்லாமி, டீ.ஏ. என்ற இயக்கப் பெயர்களில் மறைந்துகொண்டு முழு உலகிலும் முஸ்லிம்களின் ஒற்றுமையைப் பிளவுபடுத்தி, இஸ்லாத்தை அழித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த நஜ்து செய்கின் உருவில் வந்த சைத்தானே, அன்று "தாருந் நத்வா"வில் கூடியிருந்த காபிர் தலைவர்களுக்கு , ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கொலை செய்யும் திட்டத்தையும் வழங்கினான்.
                அல்லாஹு தஆலா அந்த நஜ்து சைத்தானின் திட்டத்தை முறியடித்து, இரவோடிரவாக மக்காவை விட்டும் புறப்பட்டு மதீனா நோக்கிப் போகும்படி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) மூலம் கட்டளையிட்டான்.
                காபிர் தலைவர்களினதும், நஜ்து சைத்தானினதும் கொலைச் சதி முயற்சியை முறியடித்து, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா பாதுகாத்தது பற்றி, அவர்கள் மதீனாவுக்குச் சென்றபின்னர் இறக்கிய குர்ஆன் ஆயத்தில் குறிப்பிடுகிறான்.
                அந்த குர்ஆன் ஆயத்தின் தப்ஸீரில் பல இமாம்களும் நஜ்து சைத்தானின் சதி பற்றி கூறியதை, ஸலபுஸ் ஸாலிஹீன்களின் காலத்தைச் சேர்ந்த, "தப்ஸீர் தபரி" யும், மற்றொரு பிரபலமான தப்ஸீரான "இப்னு கஸீர்" ஆகிய தப்ஸீர்கள் குறிப்பிடுவதை அல்லாஹ் கிருபையால் இதோ உங்கள் முன் வைக்கிறேன்.
                உலமாக்கள் இந்த தப்ஸீர்களை பார்வையிட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் எச்சரித்த "நஜ்து சைத்தான்" இப்போதைய ஸவூதியில் உள்ள நஜ்து தான் என்பதையும், அந்த சைத்தான் உருவாக்கிய  வழிகெட்ட பித்அத்தான "போலி தவ்ஹீதை" தான் வஹாபி இயக்கங்கள் "குர்ஆன் ஹதீஸ்" என்ற பெயரில் பரப்பி இளைஞர்களை நரகவழியில் சிக்க வைக்கின்றன என்பதையும், இந்த குர்ஆன் ஆயத்தின் ஒளியில் பொது மக்களுக்கு எத்திவையுங்கள்.
(தொடரும்)
28.9.2016

Friday, September 2, 2016

செச்னியா இஸ்லாமிய மாநாடு தீர்ப்பு . 25-27.8.2016
யார் அஹ்லுஸ்ஸுன்னா ?
வஹாபிகள் ஸுன்னத்து வல்ஜமாஅத்தினரல்லர் !
வஹாபியத்து என்பது உலக முஸ்லிம்களை பிரித்து கூறு போடும் யூத இயக்கம் என்பதை உலக அறிஞர்கள் மூலம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நாட்டிலுமாக முழு உலகிலும் கருத்தரங்குகள், விவாதங்கள் நடாத்த வேண்டும், அதன் CD க்கள், உலகின் சகல மொழிகளிலும், சகல முஸ்லிம் வீடுகளுக்கும் வினியோகிக்கப்பட வேண்டும் . அதன் மூலமே இஸ்லாத்தின் பிரதான எதிரியான "தக்பீரி"   ( تكفيري)  கொள்கையான வஹாபியத்தை முறியடிக்க முடியும். வெறும் பயான்களால் வஹாபியத்தை மடக்க முடியாது என்பதை பல தடவைகளில் நாம் வலியுறுத்தியுள்ளோம்.
1996 முதல் நாம் கூறும் இவ்வேலையை முதன் முதலாக உலகில் ' ஆக்கபூர்வமான' முறையில் செய்தது, எகிப்து ஜனாதிபதி அப்துல் பத்தாஹ் ஸிஸி தான். இரண்டு வருடங்களுக்கு முன்னர் அவர் அல் அஸ்ஹர் உலமாக்கள் மத்தியில் பேசும் போது, "முஸ்லிம்களை காபிர் என்று கூறி, பயங்கரவாதத்தை மார்க்கமாக கொண்டுள்ள திவிரவாதிகளை மடக்குவதற்கு தேவையான அத்தனை உதவிகளையும் தான் செய்வதாகக் " கூறி, அப்பொறுப்பை அஸ்ஹரி உலமாக்கள் மேல் சுமத்தினார்.
சரி விசயத்துக்கு வருவோம். அந்த வரிசையில் உலகில் நடந்த மிக முக்கியமானதும், வஹாபியத்து இஸ்லாமிய கொள்கையல்ல என்பதை உலகுக்கே பறை சாட்டுவதுமான ஒரு மாநாடு தான் கடந்த 25-27.8.2016 நாட்களில் ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள செச்னியா  (شيشان)  வின் தலைநகர் குரொஸ்னியில் சுமார் 200 க்கும் மேற்பட்ட சர்வதேச உலமாக்கள், முப்திகள் கலந்துகொண்ட மாபெரும் இஸ்லாமிய மாநாடு.
இதில் அல் அஸ்ஹர் இமாம் அஹ்மத் தீப், எகிப்து பிரதம முப்தி, முன்னாள் முப்தி, யெமன் அறிஞர்கள் ஹபீப் உமர், அலிய்யுல் ஜிப்ரி, இன்னும் ஏராளமான நாடுகளைச் சேர்ந்த பெரும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாபெரும் மாநாட்டின் இறுதியில் , ஸுன்னத்து வல் ஜமாஅத்தினர் என்றால் யார் என்பதற்கான சரியான வரைவிலக்கணம் நினைவூட்டப்பட்டது. அந்த பிரகடனத்தின் அரபு வடிவம் இது :
"أهل السنة والجماعة" حسب منهج التعليم بالأزهر، يُطلق على أتباع إمام أهل السنّة أبي الحسن الأشعري، وأتباع إمام الهدى أبي منصور الماتريدي، وأهل الحديث، ولم يخرج عن عباءة هذا المذهب فقهاء الحنفية والمالكية والشافعية والمعتدلون من فقهاء الحنابلة، وهذا المفهوم بهذا العموم الذي يشمل علماء المسلمين وأئمتهم من المتكلمين والفقهاء والمحدثين وأهل التصوف والإرشاد، وأهل النحو واللغة أكده قدماء الأشاعرة أنفسهم منذ البواكير الأولى لظهور هذا المصطلح بعد وفاة الإمام الأشعري، ثم هو ما استقر عليه الأمر عند جمهرة علماء الأمة عبر القرون التالية، وهذا هو الواقع الذي عاشته الأمة لأكثر من ألف عام، حيث عاش الجميع في وحدة جامعة استوعبت التعدد والاختلاف المحمود، ونبذت الفرقة والخلاف المذموم
சுருக்கம் :-
( அல் அஸ்ஹரில் போதிக்கப்படும் அடிப்படையில், அஹ்லுஸ்ஸுன்னாவின் இமாமான அஷ்அரி இமாம், மாதுரீதீ இமாம் ஆகியவர்கள் தெளிவுபடுத்திய அக்கீதா கொள்கைகளும், முஹத்திஸீன்களும், ஹனபீ, மாலிக்கி, சாபிஈ, மத்ஹபுகளுடன் ஹன்பலி மத்ஹபில் நடுநிலையானவர்களும், ஸூபியாக்கள், அரபு இலக்கண மொழி அறிஞர்களும், இந்த அக்கீதாவில் ஆயிரம் வருடங்களுக்கு மேலாக இருப்பவர்களும் தான் அஹ்லுஸ் ஸுன்னாக்கள் அவார்கள். இவர்கள் கருத்து வேற்றுமைகளுக்கு மத்தியில் ஒரே சமூகமாகவும், பிளவுகள் இன்றியும் வாழ்ந்து வருகிறார்கள் ).
1000 வருடங்களுக்கும் மேலாக , முழு உலகிலும் "ஸுன்னத்து வல்ஜமாஅத்து" என்று ஒற்றுமையாக வாழ்ந்தவர்கள் இவர்களே.
பயங்கரவாதிகளான, கவாரிஜ்களான, பித்அத்துவாதிகளான, வழிகெட்ட வஹாபிகள் "ஸுன்னத்து வல்ஜமாஅத்தைவிட்டும் நீங்கியவர்கள்" என்ற முடிவை மேற்சொன்ன பிரகடனம் உறுதிப்படுத்துகின்றது.
உலகில் பல்லாயிரம் பயான்கள் நடக்கின்றன. ஏராளம் மாநாடுகள் நடக்கின்றன. ஆனால் அஹ்லுஸ்ஸுன்னாவிலிருந்து இளைஞர்கள் வஹாபியாக மாறிக்கொண்டேயிருக்கிறார்கள். வஹாபியத்து கூடிக்கொண்டே வருகின்றது. ஏன்? ஏதோ ஒரு இடத்தில் குறை இருக்கின்றது. அந்தக் குறையை அகற்றி நாம் 1996,97,98 இல் நடாத்திய வஹாபி எதிர்ப்பு போராட்டத்தில் யாருமே அஹ்லுஸ் ஸுன்னாவை விட்டும் வஹாபியத்துக்கு போக வில்லை. வஹாபிகள் பலர் அஹ்லுஸ் ஸுன்னாவில் சேர்ந்தார்கள். ஆனால் இன்று வஹாபியத்தை மடக்குவதில் எகிப்து போன்ற சில நாடுகளில் "இராணுவ பலம்" தான் உபயோகிக்கப் படுகின்றது. நாமோ "அறிவு ஆதாரப் புரட்சி" மூலம் மட்டுமே இதனைச் சாதித்தோம். அல்ஹம்து லில்லாஹ்.
               
இந்த மாநாடு பற்றி பாராட்டி வெளிவந்த ஏராளம் பத்திரிகைகளில் சிலதை இங்கு குறிப்பிடுகிறோம்.
ஆம் , அல்லாஹ்வுடனேயே எதிர்த்துப் பேசிய சைத்தானின், பட்டாளத்தினர் சும்மா விடுவார்களா? தாம் "ஸுன்னத்து வல்ஜமாஅத்து அல்லர்" என்ற தீர்ப்பு உலக முஸ்லிம் பேரறிஞர்களால் வஹாபிஸலபிகளுக்கு கொடுக்கப்பட்டதும், சைத்தானின் படையினரான வஹாபிகளும் குழம்பிப் போய்தமது கவாரிஜ் ஊடகங்கள் மூலம் செச்னியா இஸ்லாமிய மாநாட்டை எதிர்த்து வாய்க்கு வந்தபடி யெல்லாம் உளறிக் கொட்டினார்கள். ஆனால் இவற்றில் கூறப்பட்ட கருத்துக்கள் எதுவும் எமது ஊரில் உள்ள "அற்ப" வஹாபிகள் கூறும் பேச்சுகளின் தரத்தை தாண்டியதல்ல என்பதை இஸ்லாமிய அக்கீதாவை முறையாகப் படித்த எவரும் இலகுவாக புரிந்து கொள்ளலாம்.
                கீழே தரப்படும் வஹாபி பத்திரிகைகளின் எதிர்ப்புக்கள் சகலதையும் , இரண்டேயிரண்டு வார்த்தைகளில் அடக்கலாம். அவை தான் :
"பொய்"
"
நுனிப்புல் மேய்தல்"
இதோ வஹாபி பத்திரிகைகளின் உளரல்கள் :-
( வருந்துகிறோம் :-
இவற்றில் உள்ள கருத்துக்களையும் இன்னும் எமது நெட்டில் நாம் வெளியிடும் ஏராளம் பத்திரிகை, வீடியோக்களையும், தமிழில் மொழி பெயர்த்து உங்களுக்கு தருவதற்கு நாம் விரும்புகிறோம் தான். ஆனால் அந்த வேலைக்கு தேவையான ஆட்பலம் , வசதி வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதால், தமிழில் தர முடியாததையிட்டு வருந்துகிறோம் ).
31.8.16