Friday, June 30, 2017

ஸிஸியின் இன்னொரு சாதனை !
கவாரிஜ் இக்வான்களுக்கு தோழ்வி !
மத்திய கிழக்கில் நடப்பதெல்லாம்  ஸிஸி ராஜ தந்திரமா ?
என்ற தலைப்பில் 12.6.2017 எமது கட்டுரையை நீங்கள் வாசித்தீர்கள் அல்லவா?
அன்றிலிருந்து 17 நாட்களுக்குப் பிறகு இன்று இன்னொரு வெற்றியை ஜனாதிபதி ஸிஸி சாதித்துள்ளார். அல்ஹம்து லில்லாஹ்.
இது காலவரை பலஸ்தீன் போராளிகளான ஹமாஸ் , எகிப்தின் எதிரியாகவும், பயங்கரவாத கவாரிஜ் இக்வான்களின் ராணுவ அமைப்பாகவும், பின்னாலிருந்து ஈரானால் இயக்கப்பட்டதாகவும் கட்டாரின் பயங்கரவாத உதவியில் தங்கியதாகவும் இருந்ததை உலகமே அறியும். (இலங்கையிலும் உலகிலும் உள்ள "வஹாபி பத்திரிகைகளே உலகம்" என்று நம்புபவர்களைத் தவிர).
இப்போது ஸிஸியின் ராஜ தந்திரத்தால், ஹமாஸ் எகிப்தில் பேச்சுவார்த்தை நடாத்தி, பலஸ்தீனிலிருந்து பயங்கரவாதிகள் எகிப்தினுள் நுழைவதைத் தடுக்கும் யுத்த சூனியப் பிரதேசம் ஒன்றை அமைப்பதற்கு ஹமாஸ் உடன்பட்டு உடனடியாக அவ்வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பகரமாக எகிப்திலிருந்து பலஸ்தீனுக்கு உணவுப்பொருள் உட்பட சுதந்திர போக்குவரத்து வழியொன்றை திறப்பதாக எகிப்து ஏற்றுக் கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு நிலவரங்களை உள்ளபடி யதார்த்தமாக அறிய எமது ஊடகங்களை நம்பியிருப்பவர்களுக்கு இது மேலும் ஒரு பரிசில் !
வஹாபி ஊடகங்களை நம்பியிருப்பவர்கள் தொடர்ந்தும் ஏமாறிக் கொண்டே யிருக்கட்டும்.
பாலைக் கொடுக்கலாம், அதைக் குடிக்கும் பாக்கியத்தை கொடுக்க முடியாது !

29.6.2017

No comments:

Post a Comment