Tuesday, March 24, 2015

தாஇஷில் சிறுவர்கள்

உலக வரலாற்றில் எண்ணிலடங்காத யுத்தங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் வஹாபி கவாரிஜ் தாஇஷ்கள் (ISIS) அப்பாவி சின்னஞ் சிறார்களை பயங்கரவாதத்தில் பயன்படுத்துவது போன்று உலக வரலாற்றில் வேறு எங்குமே பயன்படுத்தியதில்லை என்று கூறப்படுகின்றது.

18 வயதுக்கும் குறைந்த 400 சிறு குழந்தைகளை பலாத்காரமாக வஹாபி தாஇஷ்கள் அநியாயமாக பிறரை படுகொலை செய்யப் பயன் படுத்துகிறார்கள். இவ்வாறு குழந்தைகளால் தாஇஷ்கள் உருவாக்கிய படைக்கு "சிங்கக் குட்டிகள்" என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

10 வயது குழந்தைக்கு துப்பாக்கியை கொடுத்து இரண்டு பேரை சுட்டுக் கொல்லும் காட்சியை காணலாம்.

தாஇஷ்கள் கைப்பற்றும் ஊர்களில் உள்ள சிறு குழந்தைகளை யுத்த கேடயங்களாகப் பயன்படுத்தி அவர்களை கொலை செய்கிறார்கள்.

நஜ்தில் உதிக்கும் சைத்தான்களான வஹாபிகளைக் குறித்து அவர்களால் "படுகொலைகள் அதிகமாகும்" என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதையும் பொருட்படுத்தாமல் வஹாபியத்தை ஆதரிப்போர், அதனைக் கண்கூடாக கண்ட பிறகாவது உடனடியாக வஹாபி இயக்கங்களை விட்டும் ஒதுங்கினால் ஈமானைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இன்ஷா அல்லாஹ்


No comments:

Post a Comment