Wednesday, December 20, 2017

அமெரிக்கா அரசியல் தோழ்வி

அல்குத்ஸ் :
உலக அரசியலில் அமெரிக்கா படு தோழ்வி
கடந்த டிசம்பர் 6ம் திகதி முஸ்லிம் உலகுக்கு கறை படிந்த ஒரு நாள். உலக சண்டாளன் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முஸ்லிம்களுக்கு சொந்தமான அல் குத்ஸ் புனித நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என்றும், அமெரிக்க தூதரகத்தை இஸ்ரேலில் இருந்து அல்குத்ஸுக்கு மாற்றுவதாகவும் அறிவித்த நாள்.
ஆனால் உடனடியாக முஸ்லிம் உலகம் விழித்துக் கொண்டது. அத்துடன் மேற்குலகும் அமெரிக்காவை எதிர்க்க முன்வந்தது.
இஸ்ரேலுக்கெதிராக போராட மற்ற நாடுகள் முன்வரும் பட்சத்தில் தனது படைகளை அனுப்பத் தயார் என்று மலேசியப் பிரதமர் அறிவித்தார்.
 
மொரோக்கோவில் பல அரபு நாடுகளின் பிரதி நிதிகள் கூடி, அமெரிக்க தீர்மானத்தை கண்டித்தன.
துருக்கியில் 48 நாடுகளின் பிரதிநிதிகள், அவர்களுள் 16 அரச தலைவர்கள் கூடி அமெரிக்காவை கண்டித்தனர். சில மாதங்களுக்கு முன்னர் வரை இஸ்ரேலுடன் ராஜ தந்திர தொடர்புகளை ஏற்படுத்த முயன்ற துருக்கி ஜனாதிபதி அர்துகான், இந்த மாநாட்டில் இஸ்ரேலை "பயங்கரவாத நாடு" என்று காரசாரமாக கண்டித்தார்.
http://www.alalam.ir/news/3212431/%D8%A8%D9%87%D8%B0%D9%87-%D8%A7%D9%84%D8%B9%D8%A8%D8%A7%D8%B1%D8%A7%D8%AA--%D8%A3%D8%B1%D8%AF%D9%88%D8%BA%D8%A7%D9%86-%D9%8A%D8%B1%D8%AF-%D8%B9%D9%84%D9%89-%D9%82%D8%B1%D8%A7%D8%B1-%D8%AA%D8%B1%D8%A7%D9%85%D8%A8-%D8%A8%D8%B4%D8%A3%D9%86-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3--
ஈரான், லெபனான், இராக், ஸிரியா என்பனவும் ட்ரம்பை கடுமையாக எதிர்த்தன.
"அல் குத்ஸ் இஸ்ரேலின் தலைநகராவதற்கு இஸ்ரேல் என்றொரு நாடே இல்லையே" என்று மிகத் துணிச்சலாக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன் அறிவித்ததாக கொரிய பத்திரிகைகள் அறிவித்தன :
https://arabic.rt.com/video/914357-%D9%83%D9%8A%D9%85-%D8%AC%D9%88%D9%86%D8%BA-%D8%A3%D9%88%D9%86-%D9%88%D9%82%D8%B6%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D9%82%D8%AF%D8%B3-%D8%A7%D9%84%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9/#
"அரசியல் உலகிலிருந்து அமெரிக்காவை சகல உலக நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்" என்று எகிப்து பாராளுமன்றம் கேட்டுக் கொண்டது :
https://arabic.rt.com/middle_east/916191-%D9%85%D8%AC%D9%84%D8%B3-%D8%A7%D9%84%D9%86%D9%88%D8%A7%D8%A8-%D8%A7%D9%84%D9%85%D8%B5%D8%B1%D9%8A-%D9%8A%D8%AF%D8%B9%D9%88-%D9%84%D8%B9%D8%B2%D9%84%D8%A9-%D8%A7%D9%84%D9%88%D9%84%D8%A7%D9%8A%D8%A7%D8%AA-%D8%A7%D9%84%D9%85%D8%AA%D8%AD%D8%AF%D8%A9-%D8%AF%D9%88%D9%84%D9%8A%D8%A7/
இதற்கிடையில் எகிப்து ஐ.நா.பாதுகாப்புச் சபையில் ராஜ தந்திரம் மிக்க ஒரு பிரேரணையை கொண்டுவந்தது. "அல் குத்ஸ் சம்பந்தமாக தன்னிஷ்டப்படி அமெரிக்கா மட்டும் ஒரு தீர்மானத்துக்கு வர முடியாது. எனவே அது செல்லுபடியற்றது" என்பதே அந்த பிரேரணை. இதில் உள்ள ராஜ தந்திரம் என்னவென்றால், பாதுகாப்பு சபையில் உள்ள வல்லரசு எந்த நாடாவது, ட்ரம்ப் தன்னிஷ்டப்படி செய்த அந்த தீர்மானத்தை ஆதரித்தால், அது, தனது நாட்டின் கொரவத்தை அமெரிக்காவுக்கு காவு கொடுத்ததாகவும், தனது நாட்டுக்கு இழிவை ஏற்படுத்துவதாகவும் அமையும். எனவே சகல வல்லரசுகளும் எகிப்தின் பிரேரணையை ஆதரிப்பது கடமையாகிறது.
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்தினர்களாக உள்ள பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளும், தற்காலிக அங்கத்தினர்களான ஏனைய 10 நாடுகளும் எகிப்தின் பிரேரணையை ஏகமனதாக ஆதரித்து வாக்களித்தன. அமெரிக்கா மட்டுமே தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை உலக தீர்மானத்தை முறியடித்தது. அமெரிக்கா வீட்டோவை பாவித்து தனிப்படல் :
http://www.ahram.org.eg/News/202497/26/628374/%D8%A3%D8%AE%D8%A8%D8%A7%D8%B1-%D8%B9%D8%B1%D8%A8%D9%8A%D8%A9-%D9%88-%D8%B9%D8%A7%D9%84%D9%85%D9%8A%D8%A9/%D8%A7%D9%84%D9%82%D8%B1%D8%A7%D8%B1-%D8%AD%D8%B5%D9%84-%D8%B9%D9%84%D9%89-%D8%AF%D8%B9%D9%85--%D8%B9%D8%B6%D9%88%D8%A7-%D8%A8%D9%85%D8%AC%D9%84%D8%B3-%D8%A7%D9%84%D8%A3%D9%85%D9%86---%C2%AB%D9%81%D9%8A%D8%AA%D9%88%C2%BB-%D8%A3%D9%85%D8%B1%D9%8A%D9%83.aspx
இப்படி பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா மட்டும் தனிப்படுவது அபூர்வமானது. எனவே எகிப்தின் பிரேரணை உலகிலிருந்தே அமெரிக்காவை தனிமைப் படுத்தி விட்டது.
ஜோர்தானில் மன்னர் அப்துல்லாஹ்வும் பிரான்ஸ் ஜனாதிபதியும் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி அமெரிக்க தீர்மானத்தை கண்டித்து பேசும் வீடியோ :
கவலை என்னவென்றால், ஸவூதி, குவைத், எமிரேட்ஸ், பஹ்ரைன் போன்ற சில நாடுகளின் எதிர்ப்பு அரச தலைவர்கள் மட்டத்தில் பலமாக இருக்கவில்லை என்பது தான்.
உலக நாடுகளின் இந்த அமெரிக்க எதிர்ப்பு தொடருமானால் இன்ஷா அல்லாஹ் பலஸ்தீனுக்கு நல்ல காலம் பிறக்கலாம். நடப்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் மிக அறிந்தவன்.
(மேலே உள்ள எகிப்து அல் அஹ்ராம் பத்திரிகையில் விமர்சன பகுதியில் உள்ள ஒரு செய்தி மிக முக்கியமானது என்பதால் இங்கே தருகின்றோம் :
முஸ்லிம்களுக்கு முன் யூதர்கள் பலஸ்தீனில் இருந்தார்கள் என்பதற்காக அது இஸ்ரேலுக்குரியது என்ற வாதத்தை ஏற்றுக் கொள்வதாயின், அமெரிக்காவில் ஆரம்பத்தில் இருந்த செவ்விந்தியர்களுக்கு அமெரிக்காவைக் கொடுத்துவிட்டு, அமெரிக்கர்கள் வெளியேறிவிட வேண்டும். இவ்வாதத்தின்படி ஆரம்ப குடியினருக்குத்தான் ஒரு நாடு சொந்தம் என்றால், யபூஸிய்யா என்ற கன்ஆன் வர்க்கத்தைச் சேர்ந்த அரபு இனத்தவர்கள் தான் அல்குத்ஸில் 2000 வருடங்கள் முதலாவதாக வசித்தார்கள்
பின்னர் யூதர்கள் 414 வருடங்களும்,
பாரசீகர்கள் 254 வருடங்களும்,
இக்ரீக்கீன்கள் 270 வருடங்களும்,
ரோமர்கள் 700 வருடங்களும்,
அரபு முஸ்லிம்கள் 1400 வருடங்களும்
அல் குத்ஸில் வசிக்கிறார்கள். அப்படியாயின், பழமை என்ற வகையிலும் அல் குத்ஸ் அரபிகளுக்கே சொந்தம்.
அதிக காலம் வசித்தவர்கள் என்ற வகையிலும் ( 2000 + 1400 = 3400 ) அரபிகளுக்கே அல் குத்ஸ் சொந்தமாகின்றது !!! எனவே குத்ஸின் வரலாற்றைத் திரிக்கும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் முயற்சிகள் பொய்யானவையே. உலகம் அதனை ஏற்றுக் கொள்ளமாட்டாது).
19.12.2017

No comments:

Post a Comment