Sunday, November 8, 2015

76வது ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது!

அல்லாஹ்வுடைய கிருபையால் இன்று ஞாயிற்றுக் கிழமை (8.11.2015) கஹட்டோவிட்ட அல்மத்ரஸதுல் முஸ்தபவிய்யா ஆசூரா மன்ஸிலில் 76வது வருட ஆசூராக் கந்தூரி சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்து லில்லாஹ்.

இக்கந்தூரிக்கு வருகை தந்தும், உழைப்பால் உதவியும், பொருளுதவி செய்தும், மௌலிதுகள் ஓதியும், சமையல் வேலைகள் செய்தும், இதற்காக பிரார்த்தித்தும், நார்சா உணவு பரிமாறியும், மின்சார வசதிகள் செய்தும், நீர் வசதிகள் வழங்கியும், கணக்குகள் எழுதியும், ஊடகத் தொடர்புகள் வழங்கியும், வெந்தேசி போட்டும், களறி முடிந்த பின்னர் சுத்தம் செய்யும் வேலைகள் செய்தும் இவ்வாறு சகல விதங்களிலும் உதவி ஒத்தாசைகள் செய்த, பிரசன்னமான, வெளிநாடுகளில் தொழில் புரியும் அத்தனை முஹிப்பீன்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களின் நல்ல நாட்ட தேட்டங்களையும் நிறைவேற்றி, உடல் ஆரோக்கியத்தைத் தந்து, பொருளாதாரத்தில் பரக்கத்தை தந்து, ஹிதாயத்தில் உறுதியாக வாழவைத்து, ஈமானை அதிகரித்து, தக்வாவில் உயர்ந்த பதவிகளை அவர்களுக்கும் எமக்கும் தருமாறு ரஹ்மானாகிய அல்லாஹ்விடம் அதிகமாக துஆக் கேட்கின்றோம். ஆமீன்.

No comments:

Post a Comment