Wednesday, February 25, 2015

முதலாவது தாஇஷ் (ISIS) பாடசாலை

வடக்கு ஸிரியாவில் உள்ள ரிக்கா என்ற பகுதியில் தாஇஷ்கள் (ISIS) தமது குழந்தைகள் படிக்க முதலாவது ISIS பாடசாலையை ஆரம்பித்துள்ளனர். "சிங்கக் குட்டிகளுக்கான அல் பாரூக் பாடசாலை" என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள இப்பாடசாலையில் எட்டு வயதுக்குட்பட்ட சுமார் 50 – 60 தாஇஷ் மாணவர்கள் உள்ளனர். மற்ற முஸ்லிம்களை காபிர் எனல், கைதிகளைக் கொலை செய்தல், அவர்கள் பாணியிலான ஜிஹாத் என்பன பாடத்திட்டத்தின் பிரதான அம்சங்கள்

தமது நோக்கம் பற்றிக் குறிப்பிட்ட ஒரு தாஇஷ் ஆசிரியர் , (இத்தாலியின் தலைநகரான) ரோம் நகரத்தைக் கைப்பற்றல், அல் அக்ஸாவை விடுதலை செய்தல் ஆகிய காரியங்களுக்காக இந்த மாணவர்கள் தயார் படுத்தப்படுவதாக கூறினார். http://www.alalam.ir/news/1679279

No comments:

Post a Comment