Tuesday, January 5, 2016

மத்திய கிழக்கில் அரசியல் கொந்தளிப்பு

மத்திய கிழக்கில் அரசியல் கொந்தளிப்பு.
செய்திகளின் தலைப்புகள் மட்டும் :-
பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார் என்ற குற்றச் சாட்டின் பேரில் ஸவூதியில் உள்ள சீஆ ஆன்மீக தலைவரான நிமர் பாக்கர் நிமர் என்பவருக்கு ஸவூதி அரசு மரண தண்டனை நிறைவேற்றியது.
மரண தண்டனைக்குள்ளானவர் தனது தாயாருக்கு இறுதியாக பேசிய உரை :-
மரண தண்டனைக்கு பழி தீர்க்கும் வகையில் ஈரானில் உள்ள ஸவூதி தூதரகம் தீயிட்டுக் கொழுத்தப்பட்டது :-
தூதரகம் எரிக்கப்பட்டவுடன் ஈரானுடனான ராஜதந்திர தொடர்புகளை ஸவூதி துண்டித்தது. இரான் தூதரலயத்தில் இருந்தவர்களையும் விரட்டியது. :-
ஸவூதியை பின்பற்றி சூடானும் ஈரான் ராஜதந்ரிகளை நாட்டை லிட்டு விரட்டியது :-
பஹ்ரைனும் ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறித்து, ஈரான் தூதரகத்தை மூடிவிட்டது :-
ஐக்கிய அரபு இராச்சியமும் ஈரான் தூதரகத்தின் ஆட்களைக் குறைத்து தரத்தைக் குறைத்தது :-
ஸவூதி அரேபியாவுக்கு தனது பூரண ஆதரவு இருப்பதாக குவைத் அறிவித்தது :-
                யெமனிலும், ஸிரியாவிலும் நடந்துகொண்டிருக்கும் ஈரான் சார்பு, ஸவூதி சார்பு ( பயங்கரவாதத்துக்கு எதிரான) யுத்தங்களுடன் மேற்கூறிய சம்பவங்கள் தொடர்பு பட்டால் இந்த ராஜதந்திர உறவு முறிவுகள் நீண்ட தூரம் செல்ல வாய்ப்புண்டு. இன்றேல், சில நாடுகள் முன்வந்து ரகசியப் பேச்சு வார்த்தைகள் நடாத்தி, ஒரு சில வருடங்களுக்குள் மீண்டும் தொடர்புகள் ஏற்படலாம். இப்படியான உறவு முறிவுகளும் பின்னர் சேர்தலும் அரசியல் உலகில் சகஜம். 4.1.2016

No comments:

Post a Comment